7th Pay Commission: அடுத்த மாதம் முதல் அகவிலைப்படி அதிகரிக்கிறது

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் அதிகரிக்கும்... உங்களுக்கு எவ்வளவு உயர்வு கிடைக்கும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 10, 2022, 06:39 PM IST
  • ஆகஸ்ட் முதல் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்கிறது
  • ஏஐசிபிஐ-யின் தரவுகள் கொடுக்கும் நம்பிக்கை அதிகரிக்கிறது
  • மத்திய அரசு ஓய்வூதியதாரகளின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி
7th Pay Commission: அடுத்த மாதம் முதல் அகவிலைப்படி அதிகரிக்கிறது title=

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்தி: ஜூலை மாதமான தற்போது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த சுற்று அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்திய அறிக்கைகள் உண்மையானால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படலாம். ஏனெனில் இந்த முறை 5 சதவீத அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  6 சதவீத உயர்வு இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. 

ஏஐசிபிஐ குறியீட்டு எண்களில் மிகப்பெரிய முன்னேற்றம்

அதற்குக் காரணம், DA மற்றும் Dearness Relief (DR) உயர்வுகளுக்கான எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு, எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்வு இருக்கலாம் என்று மகிழ்ச்சியான செய்தியை சூசகமாக குறிப்பிட்டது.

பிப்ரவரி முதல், ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதத்திற்கான புள்ளிவிவரங்களின்படி குறைந்தது 6 சதவீதம் உயர்வு இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்

உண்மையில், அகவிலைப்படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டால், 7வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ 40 சதவீதமாக உயரும். ஜூலை 31 ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

தினசரி வாழ்க்கையில் மக்களின் செலவு அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், முதல் DA உயர்வு ஜனவரியிலும், அடுத்தது ஜூலை மாதத்திலும் வெளியிடப்படும்.  

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, மே மாத ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இம்முறை 1.3 புள்ளிகள் அதிகரித்து 129 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும், 6% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது, ஒட்டுமொத்தமாக ஜூன் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு குறையவில்லை என்றால், அகவிலைப்படி 6% அதிகரிப்பது உறுதி என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜூலை 31 ஆம் தேதிக்குள் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. அதாவது, இம்முறை ஆகஸ்ட் மாத சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ-வில் பம்பர் ஏற்றம், ரூ. 40,000 வரை சம்பளம் அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News