7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, பாதி போனஸ்தான் கிடைக்கும்

மத்திய அரசின் தபால் துறை ஊழியர்களுக்கு பாதி போனஸ்தான் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2021, 01:31 PM IST
  • ஊழியர்களுக்கு 120 நாட்களுக்கான போனஸ் வழங்க நிதி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
  • மத்திய தபால் ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
  • மத்திய அரசு நவராத்திரியின் போது, இந்திய ரயில்வே துறைக்கு போனஸ் அறிவித்திருந்தது.
7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, பாதி போனஸ்தான் கிடைக்கும் title=

புதுடெல்லி: மத்திய தபால் ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. அவர்களது போனஸ் தொகை குறித்த ஒரு மிகப்பெரிய செய்தி வந்துள்ளது.

மத்திய அரசின் (Central Government ) தபால் துறை ஊழியர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை தீபாவளியில், இந்த ஊழியர்களுக்கு பாதி போனஸ்தான் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களுக்கு 120 நாட்களுக்கான போனஸ் வழங்க நிதி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தபால் துறையின் தகுதியான ஊழியர்களுக்கு இந்த முறை 60 நாட்கள் போனஸ் மட்டுமே வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோரிக்கையை ஏற்க அமைச்சகம் மறுத்துவிட்டது

இந்திய அரசின் துணைச் செயலாளர் அசோக்குமார், அஞ்சல் துறை (Post Office) அமைச்சகத்திற்கு 120 நாட்கள் உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை கெஸெட்டட் அல்லாத ஊழியர்களுக்கு வழங்குவதற்கான கோரிக்கையை அனுப்பியுள்ளதாகக் கூறினார். ஆனால் இந்த திட்டத்தை ஏற்க அமைச்சகம் மறுத்துவிட்டது. அதாவது, இந்த முறை 120 நாட்களுக்கு பதிலாக, 60 நாட்கள் உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் தீபாவளி அன்று கிடைக்கும்.

போனஸ் எவ்வளவு கிடைக்கும்?

துணைச் செயலாளர் அசோக்குமாரின் உத்தரவுக்குப் பிறகு, அஞ்சல் துறை தனது அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. கிராமின் டாக் சேவக், கேஷுவல் தொழிலாளர்கள், குரூப் பி-யின் நான் கெசடட் அதிகாரிகள், எம்டிஎஸ் மற்றும் குரூப் சி ஊழியர்கள் ஆகியோருக்கு ரூ. 7000 கிடைக்கும். இதற்கு மேல், எந்த ஊழியரும் போனஸாக எந்தத் தொகையையும் பெறமாட்டார்கள்.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி, இனி இந்த தொகையும் சம்பளத்தில் சேரும்

துணைச் செயலாளர் அசோக்குமாரின் உத்தரவுக்குப் பிறகு, அஞ்சல் துறை தனது அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. 60 நாட்களுக்கான போனஸ் என்ற அடிப்படையில் கிராமின் டாக் சேவக், கேஷுவல் தொழிலாளர்கள், குரூப் பி-யின் நான்-கெசடட் அதிகாரிகள், எம்டிஎஸ் மற்றும் குரூப் சி ஊழியர்கள் ஆகியோருக்கு ரூ. 7000 கிடைக்கும். இதற்கு மேல், எந்த ஊழியரும் போனஸாக எந்தத் தொகையையும் பெறமாட்டார்கள்.

போனஸ் பெறுவது எப்படி

அகில இந்திய கணக்குகள் மற்றும் தணிக்கை குழுவின் பொதுச் செயலாளர் எச்எஸ் திவாரி கூறுகையில், உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை அகற்றும் செயல்முறை மிகவும் எளிதானது என்றார். இதில் அடிப்படை ஊதியம், எஸ்.பி. உதவித்தொகை, பிற இட மாற்றம் (டியூட்டி) அலவன்ஸ், அகவிலைப்படி, பயிற்சி அலவன்ஸ் ஆகியவை சேர்க்கப்படும். இதற்குப் பிறகு, ஊழியர்களுக்கு ஆண்டு அடிப்படையில் போனஸ் தொகை கிடைக்கும்.

ரயில்வே ஊழியர்களும் போனஸ் அறிவிக்கப்பட்டது

முன்னதாக மத்திய அரசு நவராத்திரியின் போது, இந்திய ரயில்வே துறைக்கு (Railways) போனஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. போனஸ் தொகை குறித்து ஜேசிஎம், ஊழியர் தரப்பு அதிகாரி ஷிவ் கோபால் மிஸ்ரா ஏமாற்றம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ரயில்வேயில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பணியாளரின் பணி அழுத்தமும் மிக அதிகமாக உள்ளது. ஊழியர்கள் அதிகமாக வேலை செய்திருந்தால், போனஸ் தொகையும் அதிகமாக இருக்க வேண்டும்.” என்று கூறினார்.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம், குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பில் மாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News