குழந்தைகளுக்கான ஆதார்: இந்த விஷயங்களில் கவனம் தேவை

Aadhaar for Children: குழந்தையின் ஆதார் அட்டையை உருவாக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 9, 2022, 02:41 PM IST
  • ஆதார் அட்டை ஒரு அத்தியாவசிய ஆவணமாகும்.
  • ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்காக உருவாக்கப்படும் ஆதார் அட்டை நீல நிற அட்டையாக இருக்கும்.
  • ஆதார் அட்டையில் குழந்தையின் பெற்றோரின் பெயரை சரியாக உள்ளிடவும்.
குழந்தைகளுக்கான ஆதார்: இந்த விஷயங்களில் கவனம் தேவை title=

ஆதார் அட்டை இன்று நம் நாட்டில் அத்தியாவசிய ஆவணமாகிவிட்டது. இப்போது அது நமது அடையாளத்தின் மிக உறுதியான சான்றாகக் கருதப்படுகிறது. ஆதார் அட்டை இல்லாமல் வங்கிக் கணக்கு தொடங்குதல், பள்ளி-கல்லூரியில் சேர்க்கை போன்ற பல முக்கியப் பணிகளைச் செய்ய முடியாது. எனவே, ஒவ்வொரு நபரும் ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியமாகிவிட்டது.

குழந்தைகளுக்கும் ஆதார் அட்டையை உருவாகக் முடியும். ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்காக உருவாக்கப்படும் ஆதார் அட்டை நீல நிற அட்டையாக இருக்கும். இந்த ஆதார் அட்டையில் குழந்தையின் பயோமெட்ரிக் பதிவு இருப்பதில்லை. அதாவது குழந்தையின் கைரேகை மற்றும் கண்ணின் விழித்திரை ஸ்கேன் செய்யப்படாது. இந்த இரண்டு தகவல்களும் குழந்தைக்கு 5 வயது ஆன பிறகு பதிவு செய்யப்பட்டுகின்றன. 

இந்த விஷயங்களை மனதில் கொள்ளவும்: 

குழந்தை பிறந்த பிறகு குழந்தைகான ஆதார் அட்டையை கண்டிப்பாக உருவாக்கவும். ஏனெனில், இப்போது பல விஷயங்களுக்கு ஆதார் அவசியம் என்பதால் இதைச் செய்வது அவசியமாகும். குழந்தைக்கு ஆதார் அட்டை உருவாக்கப்படவில்லை என்றால் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இப்போது பல பள்ளிகள் சேர்க்கையின் போது ஆதார் அட்டை கேட்கத் தொடங்கியுள்ளன. குழந்தையின் ஆதார் அட்டையை உருவாக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

சரியான பெயர்:

குழந்தையின் ஆதார் அட்டையை உருவாக்கும் போது, ​​அவரது பெயரை சரியாக உள்ளிடவும். பெயர் மற்றும் குடும்பப்பெயர் போன்றவற்றில் எழுத்துப்பிழைகள் உள்ளனவா என்பதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். பெயரில் உள்ள தவறு பின்னர் பிரச்சனைக்கு வழிவகுக்கும். அதை சரிசெய்ய நேரம் வீணாகலாம். 

மேலும் படிக்க | மொபைல் எண் மாறிவிட்டதா? இன்றே ஆதாருடன் இணைத்து விடுங்கள்: செயல்முறை இதோ 

பெற்றோர் பெயர்:

ஆதார் அட்டையில் குழந்தையின் பெற்றோரின் பெயரை சரியாக உள்ளிடவும். ஆதார் மையத்திலோ, மருத்துவமனையிலோ கூட்டம் அதிகமாக இருப்பதால், குழந்தையின் பெற்றோரில் ஒருவரின் பெயர் தவறாகப் பதிவு செய்யப்படுவது பல நேரங்களில் நடக்கிறது. குறிப்பாக குடும்பப்பெயர்களில் குழப்பம் அதிகமாக உருவாகலாம். ஆகையால், இதில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. 

முகவரி:

குழந்தையின் ஆதார் அட்டையை உருவாக்கும் போது, ​​முகவரியை சரியாக உள்ளிடவும். வழக்கமாக, தந்தையின் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட முகவரி கொடுக்கப்பட்டு, அது தொடர்பாக தந்தையின் ஆவணங்கள் கோரப்படுவது வழக்கம். எனினும், கணினியில் உள்ளிடப்பட்ட தகவல்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். 

பெற்றோரின் ஆதாருடன் இணைப்பு:

குழந்தையின் ஆதார் அட்டை பெற்றோரின் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம், பெற்றோரின் ஆதார் அட்டையில் இருந்து குழந்தையை எளிதாக அடையாளம் காண முடியும்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கவும்.

5 வயதுக்குப் பிறகு, குழந்தையின் நீல நிற ஆதார் அட்டையைப் புதுப்பிக்கலாம். 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க வேண்டியது அவசியம். அப்டேட் செய்யும் போது கண்ணின் விழித்திரை ஸ்கேன் மற்றும் கைரேகையின் தகவல்கள் பதிவாகும்.

மேலும் படிக்க | Aadhaar: உங்கள் ஆதார் அட்டையை வேறு யாராவது பயன்படுத்தினார்களா? கண்டறிய சுலப வழி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News