சுயஇன்பத்திற்காக ஆணுருப்புக்குள் ஊசியைச் செருகிய 14 வயது சிறுவன்!!

சுயஇன்பம் காண ஆணுருப்புக்குள் ஊசியைச் செருகிய சிறுவன்; மூன்று நாட்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி!!

Last Updated : Aug 21, 2019, 03:02 PM IST
சுயஇன்பத்திற்காக ஆணுருப்புக்குள் ஊசியைச் செருகிய 14 வயது சிறுவன்!! title=

சுயஇன்பம் காண ஆணுருப்புக்குள் ஊசியைச் செருகிய சிறுவன்; மூன்று நாட்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி!!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். இந்நிலையில், சுயஇன்பம் காண ஆணுருப்புக்குள் ஊசியைச் செருகிய சிறுவனின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

துணிசியா நாட்டின் துணிஸ் என்ற பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த மூன்று நாட்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளான். அதற்கானக் காரணத்தை பெற்றோர் கேட்டும் அவன் எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளான். இதையடுத்து அவனை உடனடியாக அங்கிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கே மருத்துவர்கள் அவனை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவனது ஆணுறுப்பில் ஊசி ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். பின்னர் அந்த சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவனது ஆணுறுப்பிற்கு எந்த பிரச்சனையிம் இல்லாமல் அந்த ஊசியை வெளியே எடுத்துள்ளனர். இந்த  சிகிச்சை முடிந்ததும்தான் சிறுவனால் வழக்கம்போல சிறுநீர் கழிக்க முடிந்தது. இதையடுத்து சிறுவனிடம் மனநல மருத்துவர் நடத்திய விசாரணையில் சிறுவன் சுய இன்பத்துக்காக ஊசியை அந்த இடத்தில் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளான். அதன் பின் அவனுக்கு பாலியல் பற்றியும் பாதுகாப்பான முறையில் சுய இன்பம் பெறுவது பற்றியும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

 

Trending News