‘இந்த’ 5 ராசிக்காரர்களை அனைவரும் ஏமாற்றுவர்! யார் அந்த பாவமான ராசியை சேர்ந்தவர்கள்?

ஒரு சில ராசிக்காரர்களை அவர்களுடன் இருப்பவர்களே ஏமாற்றி விடுவராம். யார் அந்த ராசியை சேர்ந்தவர்கள்? 

Written by - Yuvashree | Last Updated : Oct 4, 2023, 06:31 PM IST
  • ஏமாற்றங்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கம்.
  • சில ராசியை சேர்ந்தவர்களை தொடர்ந்து பலர் ஏமாற்றுவர்.
  • யார் அந்த ராசியை சேர்ந்தவர்கள்?
‘இந்த’ 5 ராசிக்காரர்களை அனைவரும் ஏமாற்றுவர்! யார் அந்த பாவமான ராசியை சேர்ந்தவர்கள்? title=

நம் அனைவருக்கும் நட்பு, காதல் போன்ற உறவுகளிலை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். காதல், அன்பு, பாசம் நிறைந்த உறவுகளை பார்க்கும் போது சிலருக்கு ஏக்கமாக இருக்கும். காரணம், அவர்களது வாழ்வில் அது போன்ற நம்பிக்கையான உறவுகள் கிடைத்திருக்காது. அதிலும், ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பலரால் ஏமாற்றப்படுவர். உங்கள் ராசி இப்படி ஏமாற்றப்படும் லிஸ்டில் உள்ளதா? இங்கே பார்ப்போம். 

1.மீனம்:

12 ராசிகளில் கடைசி ராசியாக இருப்பது மீனம். ஆனால், பிறரால் ஏமாற்றப்படும் ராசியில் முதல் இடத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கு பிறரை புரிந்து கொள்ளும் திறன் இயல்பாகவே அதிகமாக இருக்கும். தன்னை சுற்றி இருப்பவர்களிடம் இவர்கள் நன்மைகளை மட்டுமே பார்ப்பார்கள். இதனால் தன்னை ஒருவர் ஏமாற்றுகிறார் என்றால் கூட இவர்களுக்கு தெரியாது. 

2.துலாம்:

துலாம் ராசியை சேர்ந்தவர்கள், ஒரு உறவில் இருக்கிறார்கள் என்றால் தன்னுடன் சம்பந்தப்பட்டவர்களை அப்படியே கண்மூடித்தனமாக நம்புவர். தனது உறவில் சண்டை, சச்சரவு வர வேண்டாம் என நினைக்கும் இவர்கள், பல சமயங்களில் தவறை தன் கண் முன்பு பார்க்கும் போதும் அதை கேட்க மாட்டார்கள். இவர்களை சுற்றி இருக்கும் சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு இவர்களை பல சமயங்களில் ஏமாற்றுவர். இவர்களின் நல்ல உள்ளத்தினை பல இடங்களில் பயன்படுத்தி கொள்வர். இதனால் துலாம் ராசியை சேர்ந்தவர்கள் பல சமயங்களில் தன்னை சுற்றி இருப்பவர்கவை தவறாக எடை போட வாய்ப்புகள் உள்ளது. 

மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்கள் அறிவுக்கூர்மையுடன் இருப்பார்களாம்..! யார் அவர்கள்..?

3.ரிஷபம்:

நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கு பெயர் போனவர்கள், ரிஷப ராசிக்காரர்கள். இவர்களிடம் இருக்கும் பிரச்சனை, தன்னிடம் இருக்கும் நற்குணங்கள் பிறரிடமும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு எதையும் யோசிக்காமல் அனைவரையும் நம்புவர். இதுவே இவர்கள் ஏமாற வழி வகுத்து விடும். ஒரு சூழ்நிலை தவறானது என்று தெரிந்து விட்டால் அது மாறும் என காத்திருப்பார்களே அன்றி, அதிலிருந்து மீள வேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள். 

4.கடகம்:

கடக ராசியை சேர்ந்தவர்கள், உணர்வு ரீதியாக அடிக்கடி கட்டுப்படுத்தப்படுவார்கள். அதிலும் தனது அன்புக்குரியோரிடம் இவர்களுக்கு உணர்வு ரீதியாக பெரிய இணைப்பு இருக்கும். இது போன்ற பலமான உணர்ச்சி பிணைப்பு இவர்களை பல சமயங்களில் கவிழ்த்து விட்டுவிடும். ஒரு உறவில் இருக்கும் இவர்கள் தனது அன்புக்குரியவர் ஏதேனும் தவறு செய்தால் அதை மேற்கோள் காட்டி கூறுவதை விட்டுவிட்டு, அந்த உறவு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அது குறித்து எதுவும் கேட்காமல் விட்டுவிடுவர். இதனால் இவரை பலர் ஏமாற்றுவர். 

5.தனுசு:

தனுசு ராசியை சேர்ந்தவர்கள் சாகச விரும்பியாகவும், தன் மனம் கூறும் விஷயங்களை கேட்பவர்களாகவும் இருப்பர். இதை வைத்து சிலர் அவர்களை சமயங்களில் ஏமாற்ற முயற்சிக்கலாம். எந்த புதிய விஷயத்தை எடுத்தாலும் அவர்கள் அதை நல்ல நோக்கத்தில் மட்டுமே பார்ப்பர். இதுவே அவர்கள் தப்பானவர்கள் மீது நம்பிக்கை வைக்க வழி வகுக்கும். இதனால் பல முறை இவர்கள் ஏமாற்றப்படுவர். 

மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு பொறுப்பே இருக்காது..! யார் அவர்கள்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News