சுக்கிரன் பெயர்ச்சி, குபேர யோகத்தால் செழிக்கப்போகும் இந்த 3 ராசிக்காரர்கள்

வேத ஜோதிட சாஸ்திரப்படி, செல்வத்தை அள்ளித் தரும் சுக்கிரன், மார்ச் 31 அன்று சனியின் ராசியான கும்பத்தில் பிரவேசித்தார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 2, 2022, 12:50 PM IST
  • எதிர்பாராத பண வரவு ஏற்படும்.
  • பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு.
  • வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
சுக்கிரன் பெயர்ச்சி, குபேர யோகத்தால் செழிக்கப்போகும் இந்த 3 ராசிக்காரர்கள் title=

ஜோதிடத்தின் படி, அன்பு, அழகு, செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை தரும் சுக்கிரன் கிரகம் 2022 மார்ச் 31 வியாழன் அன்று தனது ராசியை மாற்றி கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளது. சனி பகவான் கும்ப ராசிக்கு அதிபதியாவார். அதில் சுக்கிரன் பிரவேசம் செய்வது பெரிய நிகழ்வாகும். சுக்கிரனின் இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களிலும் காணப்படும். இந்த காலகட்டத்தில் அளவுகடந்த மகிழ்ச்சி, செழிப்பு, வளமை, அன்பான குடும்ப சூழல் ஆகியவை கிடைக்கும். அதன்படி இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த மூன்று ராசியினருக்கு குபேர யோகம் கிடைகும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: வருமானம், லாப வீடு எனப்படும் உங்கள் ராசியிலிருந்து 11ம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரித்துள்ளார். எனவே, இந்த நேரத்தில் உங்கள் வருமானம் கூடும். இதனுடன், புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். நல்ல பணம் லாபமாக கிடைக்கும். இதனுடன், இந்த நேரத்தில், சுக்கிரன் கிரகம் உங்கள் சொத்து மற்றும் குடும்பத்தின் இரண்டாவது வீட்டிற்கும், தம்பதிகள் மற்றும் கூட்டாண்மைக்கு ஏழாவது வீட்டிற்கும் அதிபதியாக இருக்கிறார். எனவே, நீங்கள் சரியான நேரத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறலாம். மேலும், கூட்டாண்மையின் மிகப்பெரிய பலனைப் பெறலாம். 

மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் கால சர்ப்ப தோஷம்; சில எளிய அமாவாசை பரிகாரங்கள்!

மகரம்: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். செல்வம், குடும்பம் மற்றும் பேச்சு ஸ்தானம் என்று அழைக்கப்படும் உங்கள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரித்துள்ளார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். மேலும், பணம் எங்காவது சிக்கியிருந்தால், அதைப் பெறலாம். பதவி உயர்வு தடைபட்டவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வணிகத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம், ஏனெனில் இதுவே சரியான நேரமாகும். மறுபுறம், சனி பகவான் மகரத்தின் மீது ஆட்சி செய்கிறார் மற்றும் ஜோதிடத்தின் படி, சனி மற்றும் சுக்கிரன் இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே இந்த பெயர்ச்சி உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும்.

கும்பம்: கும்ப ராசி-இல் இருந்து சுக்கிரன் லக்ன வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமான வீடாகக் கருதப்படுகிறது. மேலும், உங்கள் ராசிக்கு சுக்கிரன் யோக கிரகம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு கேந்திரங்கள் மற்றும் திரிகோணங்களின் அதிபதியும் ஆவார். மேலும், சுக்கிரன் கிரகம் நான்காவது அதாவது மகிழ்ச்சி வீட்டிற்கும், ஒன்பதாவது அதாவது கும்பத்தின் அதிர்ஷ்ட வீட்டிற்கும் அதிபதி. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். சொத்து வியாபாரிகள், ரியல் எஸ்டேட் முகவர்கள், டிராவல் ஏஜென்ட்கள் மற்றும் ஆட்டோமொபைல் வியாபாரம் செய்பவர்கள் இது சிறப்பான நேரம். கும்பம் சனி பகவானல் ஆளப்படுகிறது மற்றும் சுக்கிரனுடனான நட்பின் உணர்வின் காரணமாக, இந்த மாற்றம் நல்லதாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் அஸ்தமனம்: ஏப்ரல் 12 வரை இந்த ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் தொடரும், ஹை அலர்ட் தேவை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News