நடிகை சித்ரா மரணத்திற்க்கு முன் ஹோட்டலில் தங்கியது ஏன்?

தம்பதியினர் திருவன்மியூரில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கியிருந்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 9, 2020, 04:29 PM IST
நடிகை சித்ரா மரணத்திற்க்கு முன் ஹோட்டலில் தங்கியது ஏன்? title=

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைகாட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றவர். சென்னை நசரேத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா அங்கு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த செய்தி வெளியாகி சின்னத்திரை உலகையே உலுக்கிவருகிறது.

ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபருடன் சித்ராவுக்கு (Actress chitra) திருமணம் நிச்சயமாகியிருந்தது. இருவரும் ஹோட்டலில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் (Serial shooting) முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா.

ALSO READ | சித்ரா மரணம்! போலீஸில் ஹேம்நாத் கூறிய திடுக் தகவல்!

ஹோட்டலுக்கு வந்தவுடன் தான் குளிக்கப்போவதாக சொல்லிவிட்டு, ஹேமந்தை வெளியே நிற்கவைத்து விட்டு அறையின் கதவை மூடிக் கொண்டார். ஹேம்நாத் அறையின் வெளியே நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். பிறகு கதவை தட்டியபோது பதில் ஏதும் வரவில்லை. எனவே ஹேமந்த் (Hemanth Kumar) மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே போய் உள்ளார். அங்கு சித்ரா புடவையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். உடனே அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் (police), சித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சித்ரா தனது தாய் மற்றும் கணவர் ஹேமந்த்குமார் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதால் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஹோட்டலில் தங்கியிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக தம்பதியினர் திருவன்மியூரில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கியிருந்தனர்.

ALSO READ | Instagram இல் வைரலாகும் நடிகர் சித்ராவின் கடைசி வீடியோ!

சித்ராவின் தந்தை காமராஜ் தனது மகள் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை கோரி நஸ்ரெத்பேட்டையில் போலீஸ் புகார் அளித்துள்ளார். 

Trending News