தேவிக்கு அதிர்ச்சி கொடுத்த மாரி - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Maari Zee Tamil mega serial update: தெரிய வந்த தாராவின் சூழ்ச்சி.. தேவிக்கு அதிர்ச்சி கொடுத்த மாரி! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2023, 12:51 PM IST
  • தெரிய வந்த தாராவின் சூழ்ச்சி.
  • தேவிக்கு அதிர்ச்சி கொடுத்த மாரி.
  • மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தேவிக்கு அதிர்ச்சி கொடுத்த மாரி - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  இந்த சீரியலில் மாரி சூர்யாவுக்கு தேவியம்மாவை காட்டுவதாக சத்தியம் செய்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. வீட்டில் எல்லாரும் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருக்க சங்கரபாண்டி சாமியாரை மாற்றி வீட்டிற்கு கூட்டி வர மாரிக்கு சந்தேகம் எழுகிறது, பிறகு சாமியாரை தாராவின் ரூம்க்கு அழைத்து செல்ல அவள் தேவியை இந்த பாட்டிலில் அடைக்க வேண்டும் என தனது திட்டத்தை சொல்கிறாள். மறுபக்கம் மாரி தேவியம்மாவை வேண்டிக்கொண்டிருக்க அங்கு தோன்றும் ராசாத்தி இது நீ வர சொன்ன சாமியார் கிடையாது, தேவியம்மாவை பாட்டலில் அடைக்க கூட்டி வந்திருக்கும் சாமியார் என்று சொல்ல மாரி அதிர்ச்சி அடைகிறாள். 

மேலும் படிக்க | Father's Day: ‘அன்புள்ள அப்பா..’ ஸ்வீட்டான தந்தையர் தின வாழ்த்துகள் சொன்ன பிரபலங்கள்..!

பிறகு தனது கையால் வரைந்த சமயத்து மாரியம்மன் போட்டோ முன்பு நின்று மாரி வேண்டி கொண்டிருக்கும் போது அங்கு தேவியம்மா தோன்ற மாரி நீங்க எதுக்கு வந்தீங்க என்று கேட்க தேவி எப்பவும் வாங்கனு தான் கூப்பிடுவ, இப்போ என்ன எதுக்கு வந்தேன்னு கேட்கற என்று தேவி கேள்வி எழுப்ப மாரி தாராவின் திட்டத்தை சொல்கிறாள்.  ஆனாலும் தேவியம்மா இதுவரை தன்னை தவறாக நினைத்து கொண்டிருந்த சூர்யா என்னை பார்க்கணும்னு ஆசைப்படும் போது நான் எப்படி வராமல் இருப்பேன் நான் கண்டிப்பா வருவேன் என தேவி சொல்ல மாரி நீங்க வந்தா பாட்டலில் அடைத்து விடுவார்கள், வர கூடாதுனு சொல்ல தேவி நான் வருவேன் என உறுதியாக சொல்கிறாள். 

maari

பிறகு சூர்யா அம்மாவை பார்க்க போகும் ஆவலில் அவர் தனக்கு சிறுவயதில் போட்டு அழகு பார்த்த ஒரு துணியை வைத்து பீல் செய்து கொண்டிருக்க மாரி இதை பார்த்து என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள், பிறகு பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கிறது, மீண்டும் தோன்றும் ராசாத்தி மாரியிடம் ஒரு வேளை தேவியம்மா உள்ளே வந்தால் அவர்களை காப்பாற்ற சமயபுரத்து மாரியம்மன் மஞ்சளை கரைத்து பூஜையில் வை என்று சொல்லி மறைகிறாள். அதனை தொடர்ந்து தேவியம்மா வீட்டுக்கு வாசலில் தோன்ற மாரி அவரை தடுத்து நிறுத்தி சமயபுரத்து மாரியம்மன் மஞ்சள் குங்குமத்தை வைத்து கொடு போட்டு இதை தாண்டி நீங்க வர கூடாது என்று சொல்ல தேவி அந்த கோட்டை தாண்ட முடியாமல் வீட்டு வாசலில் காத்திருக்கிறாள். உள்ளே பூஜை தொடங்க தாராவும் சங்கரபாண்டியும் சந்தோசமாக இருக்க மாரி பதற்றத்தோடு இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | OTTல் வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள்; Netflix, Amazon, Hotstar, ZEE5ல் பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News