சீதா ராமன்: சீதாவின் வலையில் சிக்கிய சில்லு வண்டுகள், மகாவுக்கு காத்திருக்கும் ஆப்பு

Seetha Raman Today's Episode Update: ‌சீதாவின் வலையில் சிக்கிய சில்லு வண்டுகள், மகாவுக்கு காத்திருக்கும் ஆப்பு - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 30, 2023, 02:19 PM IST
  • தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
  • சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சீதா ராமன்: சீதாவின் வலையில் சிக்கிய சில்லு வண்டுகள், மகாவுக்கு காத்திருக்கும் ஆப்பு title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் செல்வி இன்னைக்கு நைட்டு நான் வெளியே வர மாட்டேன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்லி பிரியா,சத்தியா உட்பட மூன்று பேருக்கும் இன்னும் பயத்தை அதிகமாக்குகிறாள். 

அதைத்தொடர்ந்து சீதாவின் திட்டத்தின் படி ஆளுக்கு ஒரு குழந்தையை கட்டிக் கொண்டு எல்லோரும் ஒரே நேரத்தில் நடந்து வர அந்த சத்தம் கேட்டு தங்கைகள் மூன்று பேரும் பயப்படுகின்றனர். 

மேலும் படிக்க | ஷண்முகம் எடுத்த அதிரடி முடிவால் முத்துபாண்டிக்கு புல்ஸ்டாப்? அண்ணா சீரியல் அப்டேட்!

மறுநாள் காலையில் மூன்று பேரும் ஜுரத்தில் இருக்க மகாலட்சுமி என்னாச்சு என்று கேட்க தெரியல பிவரா இருக்கு என்று சொல்லி சமாளித்து விடுகின்றனர். இந்த நேரம் பார்த்து செக்யூரிட்டி வந்து நைட்டு என்னென்னமோ நடந்துச்சு நான் ரொம்ப பயந்துட்டேன் ஒரு சாமியாரை பார்க்க போறேன் நீ எனக்கு இன்னைக்கு லீவு வேண்டும் என்று கேட்க அப்போ இவங்களுக்கும் அதெல்லாம் கேட்டு இருக்கு முத்தாரம்மன் வந்தது உண்மைதான் என நினைத்துக் கொள்கின்றனர். 

பிறகு மூன்று பெண்களும் செக்யூரிட்டியை தனியாக சந்தித்து அந்த சாமியார் கிட்ட எங்களுக்கும் சேர்த்து கயிறு வாங்கிட்டு வா என்று சொல்ல அப்படியெல்லாம் வாங்கிட்டு வர முடியாது நேர்ல தான் வரணும் என்று சொல்லி அவர்களையும் வர ஒப்புக் கொள்ள வைக்கிறான் செக்யூரிட்டி. 

பிறகு இந்த விஷயம் சீதாவுக்கு தெரிய வர சேதுவிடம் சென்று நாங்க போட்ட பிளான் சக்சஸ் ஆகிடுச்சு, நீங்க தமிழ் எல்லாரையும் எப்படி ஆச்சு கோவிலுக்கு கூட்டிட்டு வரணும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு செல்வமா? இதோ சொத்து மதிப்பு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News