தட்டுமாற்ற வந்த ராமச்சந்திரன் - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!.

Veera TV Serial Online: நேற்றைய எபிசோடில் ராமச்சந்திரன் குடும்பத்திலிருந்து கண்மணிக்கு பூ வைக்க கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

Written by - RK Spark | Last Updated : Mar 20, 2024, 01:01 PM IST
  • தட்டுமாற்ற வந்த ராமச்சந்திரன்.
  • வாந்தி எடுத்த கண்மணி, வள்ளி கேட்ட கேள்வி.
  • வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
தட்டுமாற்ற வந்த ராமச்சந்திரன் - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!. title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராமச்சந்திரன் குடும்பத்திலிருந்து கண்மணிக்கு பூ வைக்க கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கண்மணி முழு மனசு இல்லாமல் ரெடி ஆகி கொண்டு இருக்க வீரா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி நீ வாக்கு கொடுத்துட்ட, இனிமே உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு அதனால நீ உன்னை மாத்திக்கிட்டு தான் ஆகணும் என கூறுகிறாள். உன்னுடைய கஷ்டம் புரியுது ஆனா ராகவனுக்கு இது புதுசு என சொல்கிறாள். 

மேலும் படிக்க | Silk Smitha : சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு காரணம் இதுதான்! பிரபல நடிகை கூறிய பரபரப்பு பேச்சு..

அடுத்ததாக ராமச்சந்திரன் வீட்டில் எல்லோரும் கிளம்ப மாறனும் காரில் ஏற இவன் எதுக்கு வரான் இவனை பார்த்தா அவங்களுக்கு அண்ணன் இறந்து போன விஷயம் எல்லாம் ஞாபகம் வராதா என்று சொல்ல மாறன் காரில் இருந்து இறங்கி விடுகிறான். இதைத்தொடர்ந்து ராமச்சந்திரன் குடும்பத்தினர் எல்லோரும் வீரா வீட்டுக்கு வர வள்ளி இவ்வளவுதான் வீடா என கிண்டல் அடிக்க ராகவன் நான் என்ன இங்கே வந்தா வாழப் போறேன்? அந்த பொண்ணு தானே நம்ம வீட்டுக்கு வந்து வாழப் போகுது என பதில் கொடுக்கிறான். பிறகு உள்ளே வர 4 சேர் மட்டுமே போட்டு இருக்க வீராவின் அம்மா உக்காருங்க என சொன்னதும் 4 சேர் போட்டுட்டு உட்கார சொன்னா எல்லாரும் எப்படி உட்காருவது என கேள்வி கேட்கிறாள். 

இல்ல கொஞ்சம் பேர் தான் வருவீங்கன்னு சொன்னாங்க என்று வீராவின் அம்மா சொல்ல ஆமா கொஞ்சம் பேரு தான் வந்திருக்கோம் எங்க சொந்தக்காரங்க எல்லாரும் வந்தா இந்த தெருவே பத்தாது என வள்ளி பதிலடி கொடுக்கிறார். உடனே ராமச்சந்திரன் பக்கத்தில் இருந்த ஜமகாலத்தை எடுத்து போட்டு எல்லாரையும் கீழே உட்கார வைக்கிறார். பிறகு கண்மணி காபி கொண்டு வந்து கொடுக்க அதை குடித்த வள்ளி ரேசன் சக்கரையா என நக்கலாக பேசுகிறாள். ராமச்சந்திரன் வள்ளியை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு எனக்கு இந்த கல்யாணம் நடப்பதில் சந்தோஷம் என தட்டை மாற்றப் போகும்போது கண்மணி வேகவேகமாக பின்னாடி பக்கம் ஓடிப் போய் வாந்தி எடுக்க வள்ளியும் அங்கு வருகிறாள். 

என்னாச்சு என்று கேட்க வீரா அக்காவுக்கு உடம்பு சரியில்ல என்று சொல்லி உள்ளே செல்ல வள்ளி கண்மணியிடம் இப்பதான் உன்னோட காதலன் செத்துப்போனான். அதனால உனக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும்னு எனக்கு புரியுது, உங்க வீட்ல பெரிய சம்பந்தம் வந்ததும் உன்னை கம்பெல் பண்ணி கல்யாணத்துக்கு ஒத்துக்க சொன்னாங்களா உனக்கு விருப்பம் இல்லனா சொல்லு என்று போட்டு வாங்க முயற்சி செய்ய அதை புரிந்து கொள்ளும் கண்மணி எனக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம். கேசவனை பிடித்துப் போய் தான் கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதாக சொல்கிறாள். மீண்டும் அங்கு வரும் வீரா வள்ளியிடம் ஏன் உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா என கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Vijay : விஜய்யின் காரை அப்பளம் போல் அடித்து நொறுக்கிய கேரள ரசிகர்கள்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News