2019 மக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி டிவிட்டரில் வேண்டுகோள்!

மக்களவைத் தேர்தல் தொடங்கி உள்ள நிலையில், வாக்காளர்கள் தவறாது ஓட்டு அளிக்கும்படி பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 

Last Updated : Apr 11, 2019, 09:49 AM IST
2019 மக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி டிவிட்டரில் வேண்டுகோள்! title=

மக்களவைத் தேர்தல் தொடங்கி உள்ள நிலையில், வாக்காளர்கள் தவறாது ஓட்டு அளிக்கும்படி பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கான முதற்க்கட்ட வாக்குபதிவு இன்று (ஏப்ரல் 11) தொடங்கியது. அதில் ஆந்திரா, தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், காஷ்மீர், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் என 18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு முதற்க்கட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது.

அதேபோல நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. அதில் ஆந்திரா(175) , சிக்கம்(32), அருணாச்சல பிரதேசம்(60) மூன்று மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக சட்டப்சபை தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசா மாநிலத்தை பொறுத்த வரை நான்கு கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதில் இன்று 28 தொகுதிக்கு முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடக்கிறது.

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குபதிவு முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:- பீகார்(4), அசாம்(5), ஒடிசா(4), சிக்கிம்(1), திரிபுரா(1), காஷ்மீர்(2), ஆந்திரா (25), மணிப்பூர்(1), மிசோராம்(1), சட்டீஸ்கர்(1), மேகாலயா(2), நாகாலாந்து(1), மகாராஷ்ட்ரா(7), தெலங்கானா(17), மேற்கு வங்கம்(2), உத்தரபிரதேசம்(5), அருணாச்சல் பிரதேசம்(2) என 91 தொகுதிகளுக்கு வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மிகவும் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதலே வரிசையில் நின்று மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

இந்நிலையில் வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 

2019 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. 

முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும். 

குறிப்பாக முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள், அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும்.

 

 

 

என்று பதிவிட்டுள்ளார்.

Trending News