சனியின் அருளால் ஜனவரி முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்: கேட்டது கிடைக்கும்

Ezharai Nattu Sani: சனி பகவானின் ராசி மாற்றங்களும் நிலை மாற்றங்களும் ஜோதிடத்தில் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக உள்ளன. இதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 11, 2022, 11:55 AM IST
  • சனி பகவான் ஜனவரி 17, 2023 அன்று இரவு 8:2 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.
  • இந்த சஞ்சாரத்தால் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசையின் தாக்கம் நீங்கும்.
  • தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவார்கள்.
சனியின் அருளால் ஜனவரி முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்: கேட்டது கிடைக்கும் title=

ஏழரை நாட்டு சனி 2023: சனி பகவான் கர்மாக்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் என்றும் நீதியின் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் மனிதர்கள் செய்யும் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கிறார். அனைவரும் அவரது கோவப்பார்வையிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அவரது கருணைக்கடலின் கீழ் வரவே அனைவரும் ஆசைப்படுகிறார்கள். இதற்காக பலவித பரிகாரங்களையும் செய்கிறார்கள். 

சனி பகவானின் ராசி மாற்றங்களும் நிலை மாற்றங்களும் ஜோதிடத்தில் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக உள்ளன. இதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். 12 ராசிகளிலும் அதன் பாதிப்பு இருக்கும். சனியின் மாற்றத்தின்போது சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. சிலருக்கு அதன் தாக்கம் துவங்குகிறது. 

கும்ப ராசியில் மாற்றம்

சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாவார். அவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை வருடங்கள் ஆகும். அதே நேரத்தில், ஒரு ராசியில் அவர் தனது ராசி சுழற்சியை முடிக்க 30 ஆண்டுகள் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கையில் ஏழரை நாட்டு சனி அல்லது சனி தசையைக்  கடக்க வேண்டும். 

சனி பகாவான் தற்போது மகர ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 17, 2023 அன்று கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். அவரது இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் நன்மை தீமைகளை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | செவ்வாய் வக்ர பெயர்ச்சி: ‘இந்த’ ராசிகளின் பொன்னான நாட்கள் ஆரம்பம்! 

இந்த ராசிக்காரர்களின் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசை முடிவடையும் 

சனி பகவான் ஜனவரி 17, 2023 அன்று இரவு 8:2 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். இந்த சஞ்சாரத்தால் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசையின் தாக்கம் நீங்கும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவார்கள். சனியின் மாற்றத்திற்கு பிறகு, இந்த மூன்று ராசிக்காரர்கள் பலவிதமான தொல்லைகளில் இருந்து விடுதலை பெற்று பல நல்ல பலன்களை பெறத் தொடங்குவார்கள். 

இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் தொடங்கும்

சனியின் ராசி மாற்றத்துக்குப் பிறகு, மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கும். இதனுடன் மகரம் மற்றும் கும்ப ராசியிலும் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். கடகம் மற்றும் விருச்சிக ராசியில் சனி தசை தொடங்கும். இந்த காலகட்டத்தில், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனியின் கெடுபலன்களைத் தவிர்க்க, சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கான பரிகாரங்களை செய்ய வேண்டும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு வக்ர நிவர்த்தியினால் உருவாகும் கஜகேசரி யோகம்; ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News