மார்கழி அமாவாசையில் ‘விருத்தி’ யோகம்; ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் வெற்றி தான்!

மார்கழி அமாவாசை 23 டிசம்பர் 2022 அன்று வரும் நிலையில், இந்த நாளில் ஏற்படும் ஒரு மங்களகரமான யோகம் மற்றும் சில தற்செயல் நிகழ்வுகள் சில ராசிகளுக்கு அன்னை மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக கொண்டு வரும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 20, 2022, 01:13 PM IST
  • வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் அமையும்.
  • தடைபட்ட வேலைகள் நடக்கும்.
  • கடனாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.
மார்கழி அமாவாசையில் ‘விருத்தி’ யோகம்; ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் வெற்றி தான்! title=

மார்கழி அமாவாசை 2022 தேதி மற்றும் நேரம்: இந்து மதத்தில் மார்கழி மாதம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மார்கழி அமாவாசை வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2022 அன்று வருகிறது. இது ஜோதிடத்தின் பார்வையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 5 ராசிக்காரர்களுக்கு இந்த மார்கழி அமாவாசை அன்று இதுபோன்ற சில நல்ல தற்செயல்கள் நடைபெற உள்ளன. இதனுடன், இந்த நாளில் மேற்கொள்ளப்படும் சில பரிகார நடவடிக்கைகள் அன்னை மகாலட்சுமி மற்றும் முன்னோர்களின் மகத்தான ஆசீர்வாதத்தையும் கொண்டு வரும்.

மார்கழி அமாவாசை அன்று மங்களகரமான யோகம்

மார்கழி அமாவாசை மட்டுமல்ல அனைத்து அமாவாசை அன்று,  தர்ப்பணம் மற்றும் தானம் ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இம்முறை மார்கழி  மாத அமாவாசை திதி 22 டிசம்பர் 2022 இரவு 07.13 மணிக்கு தொடங்கி 23 டிசம்பர் 2022 மாலை 03.46 மணிக்கு முடிவடைகிறது. உதயாதிதியின்படி, மார்கழி  அமாவாசை டிசம்பர் 23, வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும். வெள்ளிக் கிழமை வரும் மார்கழி  அமாவாசை லட்சுமி தேவியை மகிழ்விக்கும் சிறப்பு நாளாகும். இந்து நாட்காட்டியின்படி விருத்தி யோகமும் உருவாகிறது. இப்படிப்பட்ட ஒரு சிறப்பான சந்தர்ப்பத்தில், லட்சுமி தேவியை மகிழ்விக்க செய்யும் வழிபாடு உங்கள் செல்வத்தை பெருக்கும். இது தவிர, ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள் புண்ணிய நதியில் நீராடி, தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் வாழ்க்கையில் வளமும் இன்பமும் அதிகரிக்கும்.

மார்கழி அமாவாசை இந்த ராசிக்காரர்களுக்கு உகந்தது

கடகம்:

அரசுத் துறை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணத்தால் நன்மை உண்டாகும். அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பணியை பாராட்டுவார்கள். இந்த ராசிகளின் தலைவிதி மாறும் எனலாம்.

கன்னி:

புதிய யோசனைகள் மனதில் தோன்றும், அதில் செயல்படுவது உங்களுக்கு நன்மை பயக்கும். முன்பை விட சுறுசுறுப்பாக இருப்பதோடு ஒன்றன் பின் ஒன்றாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றிலும் ஒரு நேர்மறையான ஆற்றல் நிறைந்த சூழ்நிலை இருக்கும். அது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

மேலும் படிக்க | சுக்ரன் பெயர்ச்சியும் மாளவ்ய ராஜயோகமும்! 3 ராசிகளுக்கு சுகபோக வாழ்க்கை அமையும்!

துலாம்:

வியாபாரத்திற்கு இந்த நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடக்கும். கடனாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். வரும் வாய்ப்புகளை வீணடிக்காதீர்கள். அன்னை மகாலட்சுகியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

விருச்சிகம்:

மாணவர்களுக்கு நல்ல நாள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் அமையும். உங்களுக்கு எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக நன்மைகள் இருக்கும். குடும்பத்துடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள்.

கும்பம்:

பழைய சச்சரவுகள் தீரும். உறவுகள் வலுவாக இருக்கும். பரஸ்பர அன்பு அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கை வாழும் சூழ்நிலை உருவாகும். வீடு வாகனம் வாங்கலாம். கௌரவமும், புகழும் உயரும். பண வரவினால் நன்மை உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மகர ராசியில் திரிகிரஹி யோகம் ‘4’ ராசிகளின் தலைவிதியை மாற்றும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News