சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா வந்தது எப்படி?

கொரோனா முழு அடைப்பின் போது, ​​சென்னையின் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற பதினைந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இவர்கள் 15 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

Last Updated : Apr 26, 2020, 01:45 PM IST
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா வந்தது எப்படி? title=

கொரோனா முழு அடைப்பின் போது, ​​சென்னையின் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற பதினைந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இவர்கள் 15 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

கார்ப்பரேஷன் அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர்களில் இரு சுகாதாரத் தொழிலாளர்கள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மூன்று மாடி கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் வசிக்கிறார்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டம் அண்மையில் தரை தளத்தில் நடைபெற்றது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

"கூட்டத்தில் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் இருந்தார்களா என்பது குறித்து இன்னும் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இதுவரை கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரையும் கண்டுபிடித்துள்ளோம்" என்றும் அந்த அதிகாரி தெரிவிக்கின்றார்.

சனிக்கிழமையன்று மட்டும், சென்னை கார்ப்பரேஷனின் திரு.வி.க நகர் மண்டலத்தில் மொத்தம் 25 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களாக அடையாளம் காட்டியது. இது மண்டலத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளை 80-ஆக உயர்த்தியது. சென்னையை பொருத்தவரையில் ராயபுரம், வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மண்டலம் ஆகும்.

தண்டையார் பேட்டையில் இதுவரை 64 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன, அண்ணா நகர், தேனம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் முறையே 43, 54 மற்றும் 53 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.

நகர கூட்டுத்தாபன வரம்பில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 495-ஆக இருந்தது, சனிக்கிழமை மட்டும் 43 வழக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Trending News