ஜெயலலிதா போல் சசிகலா 'வந்தால் பார்ப்போம்' -ஓபிஎஸ் பளிச்

O Panneerselvam Slams DMK Govt: திமுக ஆட்சியின் வேதனையாக கடந்த ஓராண்டுக்குள் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 13, 2022, 04:06 PM IST
  • தேர்தலுக்கு முன் 505 வாக்குறுதிகளை திமுக மக்களுக்கு அளித்தனர்.
  • திமுக ஆட்சியில் தரமில்லாத பொங்கல் பொருட்களை வழங்கியது.
  • சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெறுகிறது.
ஜெயலலிதா போல் சசிகலா 'வந்தால் பார்ப்போம்' -ஓபிஎஸ் பளிச் title=

சென்னை: ஜெயலலிதா போல் நல்லாட்சியை  தருவேன் என சசிகலா கூறியது குறித்து செய்தியாளர்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டதற்கு "வந்தால் பார்ப்போம்" என பதில் அளித்தார். மேலும் திமுக அரசின் ஓராண்டு ஆட்சி குறித்தும் பேசினார்.

நெல்லை மாவட்டம் மேலச்செவல் பகுதியில் பசும்பொன் தேசிய கழகம் துணைத்தலைவர் ஆதி சுப்ரமணியன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முன்னாள் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் திருமண விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் தேர்தலுக்கு முன் 505 வாக்குறுதிகளை திமுக மக்களுக்கு அளித்தனர். ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்ற வில்லை. ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்கள் வேதனை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாக சீர்கேட்டிற்கு இந்த ஓராண்டு உதாரணம். 

மேலும் படிக்க: ஜெயலலிதாபோல் ஆட்சி செய்வேன் - சசிகலாவின் அடுத்த மூவ்

அதிமுக பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கியது. திமுக ஆட்சியில் தரமில்லாத பொங்கல் பொருட்களையும் பொங்கல் பரிசு தொகையும் இல்லாமல் வழங்கப்பட்டது. 

பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட ஆயிரம் மதிப்பூதியம் இன்னும் வழங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் மொத்த நீதியில் 55 சதவீதம் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது.

அடித்தட்டு மக்களும் அனைவருக்கும் சமமாக வாழும் வகையில் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் வகுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மக்களின் கைகளுக்கு நேரடியாக சென்று சேர்ந்தது தற்போது அதுபோன்ற சூழல் இல்லை. 

திமுக ஆட்சியின் வேதனையாக கடந்த ஓராண்டுக்குள் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்து விடுகிறது. எப்போது மின்சாரம் வரும் எப்போது மின்சாரம் போகும் என தெரியாமல் விவசாயிகள் மிகப்பெரிய வேதனையில் உள்ளனர் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் உள்ளனர். 

ஜெயலலிதா போல் நல்லாட்சியை  தருவேன் என சசிகலா கூறியது குறித்து கேட்டதற்கு வந்தால் பார்ப்போம் எனவும் பதில் அளித்தார்.

மேலும் படிக்க: 5 ஆண்டுகளாக நடைபெற்ற ஆறுமுகசாமி ஆணைய விசாரணை நிறைவு..விரைவில் அறிக்கை தாக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News