’யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்’: ஜெயக்குமார்

தமிழை ஆழ்ந்து கற்றவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும் என்பதற்காகவே குரூப்-2 தேர்வில் மாற்றம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Sep 29, 2019, 01:13 PM IST
’யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்’: ஜெயக்குமார் title=

தமிழை ஆழ்ந்து கற்றவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும் என்பதற்காகவே குரூப்-2 தேர்வில் மாற்றம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

பாண்டவர்கள் வழியில் அதிமுக அரசு மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்; ‘விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறும். யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது என்பது சிம்ம சொப்பனம்தான். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தால்தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்’ என்று கிண்டலடித்துள்ளார்.

மேலும், தமிழை ஆழ்ந்து கற்றவர்கள் அரசு பணிக்கு வர வேண்டும் என்பதற்காகவே குரூப்-2 தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

 

Trending News