'ரவுடி ஆகலாம் வா...' செங்கல்பட்டு இளைஞர் கொலையில் திடுக்கிடும் திருப்பம்!

Chengalpattu Crime News: நண்பனை பீர் பாட்டிலால் கழுத்தில் குத்தி படுகொலை செய்ததாக கைதான இளைஞர் அளித்த வாக்குமூலம் தான் போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக தனது நண்பனை கொலை செய்தார் அந்த இளைஞர்? பகீர் பின்னணி இதோ!

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jul 7, 2023, 02:46 PM IST
  • ஈஸ்வரன் என்பவர் பீர் பாட்டிலை உடைத்து லோகநாதனை கொலை செய்துள்ளார்.
  • இருவருக்கும் நடந்த வாக்குவாதமே இந்த கொலைக்கு இட்டுச்சென்றுள்ளது.
  • சிசிடிவி கேமராவால் ஈஸ்வரன் போலீசாரிடம் பிடிப்பார்.
'ரவுடி ஆகலாம் வா...' செங்கல்பட்டு இளைஞர் கொலையில் திடுக்கிடும் திருப்பம்! title=

Chengalpattu Crime News: செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பிரதான சாலையில் அமைந்துள்ளது பொன்மார் டாஸ்மாக் கடை. இதன் அருகே உள்ள காலி இடத்தில் லோகநாதன் என்ற இளைஞர் கழுத்தில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் செங்கல்பட்டு தாழம்பூர் ஆய்வாளர் வேலு தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக டாஸ்மாக் கடையில் பாதுகாப்பிற்காக பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொலையான லோகநாதனுடன் மற்றொரு நபர் மதுக்கடைக்கு வந்ததும், இருவரும் மது பாட்டில் வாங்கிகொண்டு வெளியே சென்றதும் பதிவாகி இருந்தது.  

பின்னர் போலீசாரின் விசாரணையில் லோகநாதனுடன் சென்ற நபர் பொன்மார் பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஈஸ்வரன் என்பது தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து சென்னை திருவொற்றியூரில் பதுங்கி இருந்த ஈஸ்வரை ஆய்வாளர் வேலு தலைமையிலான தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

மேலும் படிக்க | பைக் மீது கார் மோதி விபத்து: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் அவர் கூறிய வாக்குமூலம் போலீசாரை அதிரவைத்தது. லோகநாதன், ஈஸ்வரன் இருவரும் நண்பர்கள். சேலையூர் போலீசாரால் பெண் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அதன்பிறகு தொடர்ந்து கொலை, கொள்ளை போன்றவற்றை செய்யலாம் என்றும் அப்போது தான் பெரிய ரவுடி ஆக முடியும் என்றும் ஈஸ்வரன் லோகநாதனிடம் கூறியுள்ளார். அதோடு அதற்கு நான்தான் தலைவனாக இருப்பேன், நீ என்னுடைய கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று பல முறை லோகநாதனிடம் ஈஸ்வரன் கூறியுள்ளார். அதற்கு லோகநாதன் பலமுறை மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 5) இரவு இருவரும் ஒன்றாக பொன்மாரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக்கொண்டு அருகில் இருந்த காலி இடத்தில் குடித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது வழக்கம் போல ஈஸ்வரன் வா ரவுடி ஆகலாம் என்று அழைக்க அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார், லோகநாதன். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. 

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் ஈஸ்வரன் பீர் பாட்டிலை உடைத்து லோகநாதன் தலையில் அடித்ததுடன்,  கழுத்தில் குத்தி படுகொலை செய்ததாக ஈஸ்வரன் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் தாழம்பூர் போலீசார் ஈஸ்வரன மீது வழக்கு பதிவு செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க | கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி! 600 கிலோ தக்காளி 2 மணி நேரத்தில் விற்பனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News