வருகிற அக்டோபர் 24 ம் தேதி தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!

Last Updated : Oct 20, 2017, 06:49 PM IST
வருகிற அக்டோபர் 24 ம் தேதி தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்! title=

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் வருகின்ற 24-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அவர் தனது முகப்புத்தகத்தில் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

"தமிழகத்தில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை 4 ஆண்டுகளாக வழங்காத தமிழக அரசை கண்டித்தும்  தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்களை கண்டித்தும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்யாத அரசுகளை கண்டித்தும்.."

என தெரிவித்துள்ளார்.

Trending News