பெரியாரே ஹிந்தி சபாவிற்கு இடம் வாடகைக்கு கொடுத்தார் - ஆர்எஸ் பாரதி

திமுகவினர் மீது ஐடி ரெய்டு நடப்பது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, லஞ்சம் வாங்கியவர்களை வைத்து ரைடு செய்வது என்ன நியாயம்? உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி என விமர்சித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 4, 2023, 05:56 PM IST
  • தமிழிசைக்கு திமுகவின் வரலாறு தெரியவில்லை
  • நாங்கள் எந்த மொழிக்கும் எதிரி அல்ல
  • பெரியாரே ஹிந்தி சாபாவிற்கு இடம் கொடுத்தார்
பெரியாரே ஹிந்தி சபாவிற்கு இடம் வாடகைக்கு கொடுத்தார் - ஆர்எஸ் பாரதி title=

திமுக நெசவாளர் அணி தென் மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரை திருப்பரங்குன்றம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

வயிற்றுப் பிழைப்புக்காக மற்ற மொழிகளை பேசக்கூடாது எனக் கூறிய திமுக தற்போது முதல்வர் பேச்சை 13 மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது குறித்து தமிழிசை கூறியது குறித்த கேள்விக்கு:

தமிழிசைக்கு திமுகவின் வரலாறு தெரியவில்லை. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. 1967-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்திய எதிர்ப்பு போராட்டம் நடத்தினோம் அதற்காக நாங்கள் இந்தி பிரச்சார சபாவை இடித்து தள்ளிவிட்டோமா. பெரியாரே ஹிந்தி பிரச்சார சபாவிற்கு சொந்த இடத்தை வாடகைக்கு விட்டார் என்பது வரலாறு. எந்த மொழிக்கும் நாங்கள் விரோதி அல்ல. ஆனால் எங்களிடம் எந்த மொழியை திணித்தால் அதைவிட மாட்டோம்.

மேலும் படிக்க | டிடிஎப் வாசன் மீண்டும் பைக் ஓட்ட முடியுமா? காவல்துறை சொல்வது என்ன?

பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தை தமிழக அரசு சின்ன பிரச்சனையாக கருதுவது குறித்த கேள்விக்கு:

இதை சின்ன பிரச்சனையாக நாங்கள் கருதவில்லை. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுத்துள்ளது. ஆனால் அங்கு அரசு அந்த வேலையை செய்கிறது. பாஜக அமைச்சர்களே செய்கிறார்கள். இங்கு நடப்பதை நாங்கள் மறுக்கவில்லை ஆனால் உடனடிக்காக நடவடிக்கை எடுத்து பரிகாரம் தேடப்பட்டது. 

திமுக அமைச்சர்கள் மீதான ரைடு குறித்த கேள்விக்கு:

குற்றம் புரிந்தவர்களே லஞ்சம் வாங்கியவர்களை வைத்து ரைடு செய்வது என்ன நியாயம். உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி. ஏழரை லட்சம் கோடிக்கு உலகத்திலேயே ஊழல் செய்த பிரதமர். 75 ஆண்டுகளில் இந்தியாவில் பல பிரதமர் இருந்திருக்கிறார்கள் எந்த பிரதமரும் செய்யாத ஊழலை மோடி செய்திருக்கிறார். ஆகவே இதை பத்தி பேசுவதற்கு அவருக்கு யோகிதை இல்லை என்றார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் வெளுத்துக்கட்டும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News