பேரறிவாளன் விடுதலையை ஏற்ற அண்ணாமலை..! காண்டான காயத்ரி ரகுராம்!

பேரறிவாளன் விடுதலையை ஏற்றுக்கொள்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

Last Updated : May 18, 2022, 01:58 PM IST
  • பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்
  • காயத்ரி ரகுராம் எதிர்ப்பு
  • ட்விட்டர் பதிவால் சர்ச்சை
பேரறிவாளன் விடுதலையை ஏற்ற அண்ணாமலை..! காண்டான காயத்ரி ரகுராம்! title=

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பேரறிவாளனில் விடுதலைக்கு ஆதரவே தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | இனி உங்கள் கண்கள் உறங்கட்டும்; கால்கள் இளைப்பாறட்டும் - வாழ்த்துகள் அற்புதம்மாள்

இந்த நிலையில் பாஜவை சேர்ந்தவரான காயத்ரி ரகுராம், பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். பேரறிவாளனின் விடுதலை செய்தி வெளியான பிறகு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒரு டயலாக்- நான் இந்த டயலாக்கை தோராயமாக சொல்கிறேன் - “மிகவும் நல்ல சட்டம் உள்ளது, ஆனால் பல ஓட்டைகள் உள்ளன, சில குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளை மட்டுமே கற்றுக்கொண்டனர். அவர்கள் அதிலிருந்து வெளியே வருகிறார்கள் - எனக்கு இந்த டயலாக் பிடிக்கும் எனப் பதிவிட்டுள்ளார். அதிகாரம் அவர்களுடன் இருக்கும்போது அது அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு எனவும் காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப்பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் அண்மையில் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இழுத்தடித்தது ஏன் ? - பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News