மதுரையின் கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா கொட்டகை முகூர்த்ததுடன் தொடங்கியது

மதுரையின் பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா கொட்டகை முகூர்த்ததுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. சைவ - வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் கள்ள கள்ளழகர் - மீனாட்சியம்மன் கோவில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 8, 2024, 01:34 PM IST
  • மதுரையின் கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா.
  • ஆயிரம் பொன்சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மூகூர்த்க்கால் கோவில் முன்பாக நடப்பட்டது.
மதுரையின் கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா கொட்டகை முகூர்த்ததுடன் தொடங்கியது title=

மதுரை கள்ளழகர் கோவில்: கள்ளழகர் கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் கோவில் என்னும் கிராமத்தில் உள்ள பெருமாள் (விஷ்ணு) கோயிலாகும். இது விஷ்ணுவின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் பெருமாள் கள்ளழகர் என்றும் அவரது மனைவியான லட்சுமி திருமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரைப்பெருந்திருவிழாவிற்கான பணிகள் இன்று கொட்டகை முகூர்த்த நிகழ்வுடன் தொடங்கியது.

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில் இன்று காலை சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன்சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது. இதனடுத்து மூகூர்த்க்கால் கோவில் முன்பாக நடப்பட்டது. இந்த கொட்டகை மூகூர்த்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் கலைவாணன் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

மேலும் படிக்க | ’அதிமுகவில் ஒரு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி’ அமைச்சர் உதயநிதியை ஒருமையில் பேசிய நிர்மலா பெரியசாமி

இந்த நிகழ்ச்சியின் போது சித்திரை திருவிழா சைவ - வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி என்பதை நிருபிக்கும் வகையில் கள்ளழகர் திருக்கோயில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய இரண்டு கோவில்களின் சார்பிலும் இரண்டு திருக்கோயில்களின் சித்திரை திருவிழா பத்திரிகைகள் தாம்பூல தட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்த அழைப்பிதழ்களை நிர்வாக தரப்பில் ஒருவருக்கொருவர் அளித்து திருவிழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெறக்கூடிய மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெறவுள்ளது

இந்த கொட்டகை மூகூர்த்தத்தை தொடர்ந்து சித்திரை பெருவிழாவிற்கான பணிகள் தொடங்கும் இதனையடுத்து 21 ஆம் மாலை 7 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும், 22ஆம் தேதி மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும் இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 23 ஆம் தேதி காலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.

 பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும் , இதனை தொடர்ந்து 24 ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு அதனை தொடர்ந்து நள்ளிரவில் தசாவதாரம் நடைபெறும், 25 ஆம் தேதி தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 26 ஆம் தேதி அழகர்மலைக்கு புறப்பாடு ஆகுதல், 27 ஆம் தேதி சன்னதி திரும்புதல் நிகழ்வு நடைபெற்று விழா நிறைவுபெறும்

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மதுரை சித்திரை பெருவிழாற்கான பணிகள் தொடங்கியது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | வேலூரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி தந்ததே திமுக அரசு தான்: நடிகை விந்தியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News