சண்டையிட்டு பிரிந்து சென்ற மனைவி... திரும்பி வந்து பார்க்கையில் காத்திருந்த அதிர்ச்சி

கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனது மகன் மற்றும் சகோதரியுடன் பெண் ஒருவர் தாம்பரம் காவல் ஆனையரகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jun 23, 2022, 03:31 PM IST
  • மனைவி தீக்குளிக்க முயன்றதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
  • செல்வியை மீட்ட போலீசார் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சண்டையிட்டு பிரிந்து சென்ற மனைவி... திரும்பி வந்து பார்க்கையில் காத்திருந்த அதிர்ச்சி title=

சென்னை ஊறப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன்(37),கடந்த 10 வருடத்திற்கு முன்பு தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்த செல்வி (31) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு எட்டு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி செல்வி பிரிந்து வந்து அகரம்தென் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் செல்வி தனது குடும்பத்துடன் கணவர் மணிவண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மணிவண்ணன் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொன்டு வாழ்ந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி மீது போதைப்பொருள் வழக்கு!

இதனால் கோபமடைந்த மனைவி செல்வி மணிவண்ணனிடம் சென்று இரண்டாவது திருமணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது மணிவண்ணன் செல்வியை அடித்து துரத்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

Wife committing suicide

பின்னர் செல்வி இது குறித்து கூடுவாஞ்ச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்து 10 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மேடவாக்கம் சோழிங்கநல்லூர் பிரதான சாலையில் அமர்ந்து தனது 8 வயது மகன் மற்றும் சகோதரியுடன் செல்வி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செல்வி மீது தண்ணீரை ஊற்றி கையில் இருந்த தீ பெட்டியையும் வாங்கினர். சாலையில் இருந்து செல்வியை மீட்ட போலீசார் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தாம்பரம் காவல் ஆணையரகம் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பிரதான சாலையில் அமர்ந்து தீக்குளிக்க முயன்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | நடிகர் சூர்யாவின் மகள் தியா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News