ஒன்றரை வயது இரட்டை பெண் குழந்தைகளைக் கொன்ற தாய்! அம்மாவும் தற்கொலை செய்த சோகம்

Suicide & Murder: பெரம்பலூர் அருகே இரண்டு குழந்தைகளுக்கு விஷம் குடித்து கொலை செய்து விட்டு இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 29, 2023, 09:38 AM IST
  • இரட்டை குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்
  • குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட இளம்தாய்
  • பெரம்பலூர் குடும்பம் தற்கொலை சோகம்
ஒன்றரை வயது இரட்டை பெண் குழந்தைகளைக் கொன்ற தாய்! அம்மாவும் தற்கொலை செய்த சோகம் title=

சென்னை: பெரம்பலூர் அருகே இரண்டு குழந்தைகளுக்கு விஷம் குடித்து கொலை செய்து விட்டு இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜய்(30), ஜெயா(23), தம்பதியினர். இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தம்பதிகளுக்கு, ரிஷிகா, விஷிகா என ஒன்றரை வயதில் இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர்.

வெளிநாட்டு வேலை

வேலைக்காக விஜய் வெளிநாடு சென்ற நிலையில், குழந்தைகளுடன் ஜெயா தனது மாமனார் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். விஜய் துபாயில் இருக்க, விஜயின் பெற்றோர் கண்ணன் செல்வி தம்பதியினருடன் பென்னக்கோணம் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார் ஜெயா. 

குழந்தைகளுக்கு உணவு ஊட்டிய தாய்

இந்நிலையில் நேற்று வழக்கம் போல், குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற ஜெயா, காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. இதனால், சந்தேகப்பட்டு ஒரு ரூமை திறந்து பார்த்த போது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து கிடந்ததோடு, ஜெயா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது அவரது மாமனார் மாமியாருக்கு தெரிய வந்ததுள்ளது.

மேலும் படிக்க | சென்னை தண்டையார்பேட்டையில் மனைவியை கொன்ற கணவன் கைது!

இது குறித்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷியாமளா தேவி தலைமையில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மூவரது சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜெயா தனது இரட்டை பெண் குழந்தைகளான ரிஷிகா மற்றும் விஷிகாவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்திருக்கிறது.

தற்கொலைக்கு காரணம் என்ன?

இதனிடைய குடும்பத் தகராறு காரணமாக அண்ணன் செல்வி தம்பதியினர் ஜெயாவையும் அவரது குழந்தைகளையும் கொலை செய்து விட்டதாக ஜெயாவின் குடும்பத்தார் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இளம் பெண் ஒருவர் தனது இரண்டு இரட்டை பெண் குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும், சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | கோழி இட்ட மெகா சைஸ் முட்டை! கோவையில் நடந்த அதிசயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News