நாராயணசாமியை காங்கிரசிலிருந்து நீக்க வேண்டும் -H.ராஜா....

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியது குறித்து எச்.ராஜா ட்விட்டரில் கருத்து... 

Last Updated : Aug 31, 2018, 10:59 AM IST
நாராயணசாமியை காங்கிரசிலிருந்து நீக்க வேண்டும் -H.ராஜா.... title=

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியது குறித்து எச்.ராஜா ட்விட்டரில் கருத்து... 

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதிக்கு நேற்று மாலை புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள் புகழ்வணக்கம் செலுத்தவுள்ளனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நினைவேந்த கூட்டத்தில் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, "முதல்வராக தமிழகத்தை கட்டிக் காத்தவர் கருணாநிதி. அவர் எல்லோரையும் ஈர்க்க கூடிய சக்தி வாய்ந்த பேச்சாளர். தமிழர்களுக்கு இன்னல் இழைக்கப்பட்டபோதெல்லாம் கருணாநிதியின் குரல் ஒலித்துள்ளது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், அடித்தட்டு மக்களுக்காக வாழ்ந்து காட்டியவர் கருணாநிதி. சமூக நீதியில் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையுடன் பெரியார் வழியில் வாழ்ந்து காட்டியவர். கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி.

கிரண்பேடி தரும் தொல்லையைப் பார்க்கும்போது மாநில சுயாட்சியை நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதை உறுதியாக சொல்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள உரிமையை யாரும் பறிக்கக் கூடாது என்று போராடியவர் கருணாநிதி" என்று கூறினார்.

இதையடுத்து, பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "மாநில சுயாட்சி எனும் பிரிவினை கொள்கையை கொண்டுவர வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேசியுள்ளார். மாநில சுயாட்சியை காங்கிரஸ் ஏற்கிறதா. காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் நாராயணசாமியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்....!

 

Trending News