சினிமா பாணியில் கொலை..! போலீஸுக்கு துப்பு கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்..!

சினிமா பட பாணியில் போலீஸுக்கு தகவல் கொடுத்ததால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 10, 2022, 02:38 PM IST
  • மணல் அள்ளியதால் முருகன் கைது
  • போலீஸுக்கு தகவல் கொடுத்தவர் வெட்டிக்கொலை
  • சினிமா பாணியில் நடந்த சம்பவம்
சினிமா பாணியில் கொலை..! போலீஸுக்கு துப்பு கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்..! title=

ஸ்ரீவில்லிப்புத்தூர்  அருகே சாக்குப்பையில் மணல் அள்ளுவதை போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி கொடூரமாக வெட்டப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். 

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சுனாபுரத்தைச் சோ்ந்தவா் முருகன். இவா் வ.புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் உள்ள பெரிய ஓடையில் தனது இருசக்கர வாகனத்தில் சாக்குப் பையில் மணல் அள்ளி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததன் பேரில் வத்திராயிருப்பு போலீஸாா், முருகன் மீது வழக்குப் பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

Mariyappan

மேலும் படிக்க | முன்விரோதம் காரணமாகக் காவு வாங்கப்பட்ட இரு உயிர்கள்..! முழுப்பிண்ணனி என்ன ?

இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த மாரியப்பன் தான் தன்னை பற்றி போலீஸாருக்கு ரகசிய தகவல் தெரிவித்ததாக முருகனுக்கு யாரோ சிலர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன்,நேற்று மாலை அா்ச்சுனாபுரத்தில் உள்ள பழைய பள்ளிக்கூடம் அருகே நின்றிருந்த மாரியப்பனை தகாத வாா்த்தைகளால் பேசியுள்ளார். இதனையடுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியப்பனை கழுத்தில் வெட்டி விட்டு முருகன் தப்பியுள்ளார்.  அங்கு இருந்த மாரியப்பனின் மருமகன் சிங்கராஜூக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் முருகன். 

மேலும் படிக்க | ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி! மாணவிக்கு உதவிய எம்.எல்.ஏ!

அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த மாரியப்பனை அருகில் இருந்தவா்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மாரியப்பன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிங்கராஜ் அளித்த புகாரின் பேரில் முருகன் மீது வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை தேடி வந்தனர். இந்நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சினிமா பட பாணியில் போலீஸுக்கு தகவல் கொடுத்ததால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News