பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவனை தேர்வு எழுத விடாமல் செய்த பள்ளி நிர்வாகம்!

பள்ளி கட்டணம் கட்டாத காரணத்தினால் 8 ஆம் வகுப்பு மாணவனை 3 பாடங்களுக்கு மாதாந்திர தேர்வு எழுத விடாமல் தடுத்த தனியார் பள்ளி நிர்வாகம். 

Written by - Yuvashree | Last Updated : Dec 7, 2023, 08:15 PM IST
  • பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவனை தேர்வு எழுத விடாமல் செய்த பள்ளி நிர்வாகம்.
  • பள்ளிக் கல்வித் துறையினர் வந்த போதும் பள்ளி நிர்வாகம் பூட்டிய கேட்டை திறக்கவில்லை.
  • இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவனை தேர்வு எழுத விடாமல் செய்த பள்ளி நிர்வாகம்! title=

பள்ளி கட்டணம் கட்டாத காரணத்தினால் 8 ஆம் வகுப்பு மாணவனை 3 பாடங்களுக்கு மாதாந்திர தேர்வு எழுத விடாமல் தடுத்த தனியார் பள்ளி நிர்வாகம். பள்ளி நிர்வாகத்திடம் முறையிட வந்த பெற்றோர்களை வெளியே அனுப்பாமல் பள்ளி வாயிலை மூடி 5 மணி நேரத்திற்கு மேலாக பெற்றோர்களையும் பள்ளி நிர்வாகம் அலைகழித்துள்ளது.

திருவண்ணாமலை அடுத்த சத்திரம்  மோட்டூர் கிராமத்தில் கே.சோன் (K -Zone) என்ற சி.பி.எஸ்.சி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது, இதில் எல்கேஜி முதல் +2 வகுப்பு வரை சுமார் 600 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ஆதாம் மனைவி கீதா இவர்களது மகன் நிஷார் எட்டாம் வகுப்பும், யுகேஜி படிக்கும் நிஷாந்த் என்ற மகனும் என இரண்டு பிள்ளைகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர், இந்நிலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் நிஷாருக்கு பள்ளி கட்டணம் கட்டவில்லை எனக் கூறி மாதாந்திர பருவ தேர்வு நடைபெறும் நிலையில் 3 தேர்வுகளை எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் இரண்டு மாணவர்களுக்கும் பள்ளி கட்டணத்தை நேற்று பெற்றோர்கள் கட்டிய நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் காலையில் பள்ளிக்கு பேருந்தில் வரும் போது ஸ்னாக்ஸ் வாங்க வண்டியை நிறுத்தச் சொன்னதாக கூறி பெற்றோர்களை மாலை 3 மணிக்கு பள்ளிக்கு வர பள்ளி நிர்வாகம் அழைத்துள்ளது.

இந்நிலையில் காலை 10 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவர்களின் தாய் கீதா மற்றும் அவரது மைத்துனர் அஸ்லாம் ஆகியோரை பள்ளி நிர்வாகம் ஏன் காலையில் வந்தீர்கள் மாலையில் தானே வரச் சொன்னேன் எனக்கூறி அவர்களை பள்ளிக்கு உள்ளே அனுமதிக்காமல் தடுத்துள்ளனர், மேலும் பள்ளிக்கு உள்ளே வந்த பெற்றோர்களை பள்ளிக்கு வெளியே செல்ல விடாமல் கதவிற்கு பூட்டு போட்டு பள்ளி நிர்வாகம் அலட்சிய போக்கோடு நடந்து கொண்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் பள்ளி நடைபெறும் நாட்களில் வினாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி உணவு செய்து எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றும், பிரியாணி செய்து எடுத்து வாருங்கள் என கூறியும், பல பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் சில சமயங்களில் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும்  பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

லட்சக்கணக்கில் தனியார் பள்ளியில் பேருந்து கட்டணம், பள்ளி கட்டணம், சீருடை கட்டணம், இது மட்டுமல்லாது ஷூ போடவில்லை, காலர் மடிந்துள்ளது, முடிவெட்டவில்லை, சட்டையை டக்கின் செய்யவில்லை இதுபோன்று பல ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டார்கள் என கூறி பல சமயங்களில் அபராதம் விதித்து அபராத தொகையை பெற்று வந்ததாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் படிக்க | காதல் விவகாரம்... அக்காவை வெட்டிக் கொன்ற 18 வயது தம்பி!

அதுமட்டுமின்றி ஆண்டு விழாவிற்காக ஒரு மாணவனுக்கு ரூபாய் 2200 கட்டாயம் கட்ட வேண்டும் என்றும், ஆண்டுவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இந்த பணத்தை கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் நிர்பந்தித்ததாகவும் பெற்றோர்கள் வேதனையுடன் குற்றம் சாட்டினர், இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் பள்ளிக்குள் பள்ளி நிர்வாகம் சேர்க்காமல் வாயிலை இழுத்து மூடியது.

தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர் வந்த போதும் பள்ளி நிர்வாகம் பள்ளி வாயிலை திறக்காமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அலைகழித்த நிலையில் இறுதியாக காவல்துறையினரையும் பள்ளிக் கல்வித் துறையினரையும் உள்ளே அழைத்து பேசியது, தொடர்ந்து பேச்சு வார்த்தை முடிந்து மகன்களை பெற்றோர்கள் அழைத்துச் செல்ல வந்த நிலையில் பள்ளியில் இருந்து மாணவர் கண்ணீருடன் தேம்பி தேம்பி அழுதபடியே வெளியே வந்ததை பார்த்த பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த பெற்றோர்கள் போலீசார் வந்தவுடன் உள்ளே சென்று பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 2015 சென்னை வெள்ளம் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் ஏற்பட்டதா? எஸ்.பி.வேலுமணி விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News