நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது சந்திராயன்-2!

புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகிய, சந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்ததாக ISRO தெரிவித்துள்ளது!

Last Updated : Aug 20, 2019, 11:21 AM IST
நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது சந்திராயன்-2! title=

புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகிய, சந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்ததாக ISRO தெரிவித்துள்ளது!

நிலவின் தென் துருவத்தில் கனிம வளங்கள், தண்ணீர் இருக்கின்றதா, அங்கு மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய சந்திரயான் - 2 என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 22-ஆம் நாள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'ISRO' வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் நிலவு வட்டப் பாதையை நெருங்கும் வகையில் 'ISRO' விஞ்ஞானிகள் படிப்படியாக அதன் புவி வட்டப்பாதையை அதிகரித்தனர்.

இந்நிலையில், திரவ இன்ஜினை இயக்கி சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டது. 

இது தொடர்பாக 'ISRO' வெளியிட்ட அறிக்கையில், திட்டமிட்டபடி காலை 9.02 மணிக்கு நிலவின் பாதையில் சந்திராயன் -2 கொண்டு செல்லப்பட்டது. நாளை(ஆகஸ்ட் 21), ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1-ல் நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் -2 விண்கலத்தின் திசை 4 முறை மாற்றப்படும். நிலவின் சுற்றுப்பாதையில் நாளை பகல் 12.30 மணி முதல் 1.30 மணிககுள் சந்திராயன்-2ன் திசை மாற்றப்படுகிறது.

4 முறை திசையை மாற்றிய பிறகு 100 கி.மீ.., தூரத்தில் கடைசி சுற்றுப்பாதையை சந்திராயன்- 2 அடையும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் சந்திராயன்- 2ல் இருந்து செப்டம்பர் இரண்டாம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றும். பின்னர் விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை இரண்டு முறை மாற்றப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர், செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கி, விக்ரம் லேண்டர் ஆய்வை துவங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Trending News