கூகுள் நிறுவனத்தின் "ஆல்பபெட்" CEO-வாக சுந்தர் பிச்சை நியமனம்

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.

Last Updated : Dec 4, 2019, 08:23 AM IST
கூகுள் நிறுவனத்தின் "ஆல்பபெட்" CEO-வாக சுந்தர் பிச்சை நியமனம் title=

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவை சேர்ந்த, 'கூகுள்' நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. அந்த அவ்வகையில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன் அதன் துணை நிறுவனமான 'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை கவனிப்பார். இந்த அறிவிப்பினை கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான லாரி பேஜ், மற்றும் செர்ஜி பிரைன் இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.

Trending News