வளர் இளம் பெண்களின் மார்பகங்கள் வேகமாக வளர்வதை தடுக்க, அவர்களின் மார்பகங்களில் சூடான கல்லை வைத்து தேய்க்கும் கொடூர பழக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது......
இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் 191 ரன்கள் இலக்கை அடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி-20 போட்டி நேற்று கிங்ஸ்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் மற்றும் தவான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலர்களை பதம் பார்த்தனர்.
> 22 பந்துகளில் 39 ரன்களை குவித்த கோலி 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
> 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தவான் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா.
நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 5_வது ஒருநாள் கிங்ஸ்டனில் நடைபெற்றது. டாஸ்ஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 206 ரன்கள் தேவைப்பட்டது.
தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியால் 37_வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டனில் இன்று நடக்கிறது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
முதலாவது ஆட்டம்:- மழையால் பாதியில் ரத்தானது
இரண்டாவது ஆட்டம்:- இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்றாவது ஆட்டம்:- இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4-வது போட்டி:- வெஸ்ட் இண்டீஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான எவின் லீவிஸ் மற்றும் கைல் ஹோம் தலா 35 ரன்களை குவித்தனர். நிதான துவக்கத்தை அளித்த ஜோடியை பாண்டியா பெவிலியனுக்கு அனுப்பினார். துவக்க ஜோடியை தொடர்ந்து களமிறஹ்கிய ஷை ஹோம் 25 ரனக்ளுடனும், ராஸ்டன் சேஸ் 24 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1-0 என்ற முன்னிலையில், 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சையே தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய வீரர் ரஹானேவும், ஷிகர் தவானும் தனது பேட்டிங்கை தொடங்கினர்.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டதாவது:-
தமிழ்நாட்டில் சென்னை அருகே உள்ள எண்ணூரில் காமராஜர் துறைமுகம் உள்ளது. இது லாபகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 12 பெரிய முக்கியத் துறைமுகங்களில் காமராஜர் துறைமுகம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. காமராஜர் துறைமுகத்தின் லாபத்தில் இருந்து குறிப்பிட்டத் தொகை மத்திய அரசுக்கு பங்கீடாக வழங்கப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.