Turkey: 13 நாட்களுக்கு பின் இடிபாடுகளில் புதையுண்ட கணவன் மனைவி உயிருடன் மீட்பு!

நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்களுக்குப் பிறகு, அதாவது 450 மணிநேரங்களுக்குப் பிறகு, கணவனும் மனைவியும் உயிருடன் மீட்கப்பட்டனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 19, 2023, 04:54 PM IST
  • நிலநடுக்கம் ஏற்பட்ட 450 மணிநேரங்களுக்குப் பிறகு, இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்ட கணவன்-மனைவி மீட்பு.
  • துருக்கி-சிரியா பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 46,000 ஐ தாண்டியுள்ளது.
  • நாட்கள் செல்ல செல்ல, உயிருடன் இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
Turkey: 13 நாட்களுக்கு பின் இடிபாடுகளில் புதையுண்ட கணவன் மனைவி உயிருடன் மீட்பு! title=

Turkiye Earthquake: துருக்கியில் பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நாட்கள் செல்ல செல்ல, உயிருடன் இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இருப்பினும், மீட்புப் பணியின் போது பல அதிசயங்கள் நிகழ்கின்றன, யாராலும் நம்ப முடியாத சம்பவங்கள் ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் புதையுண்ட கணவன் மனைவி உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அவர் தனது குழந்தையை இழந்தாலும்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்களுக்குப் பிறகு கணவனும் மனைவியும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஊடக அறிக்கைகளின்படி, துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்ட 13 நாட்களுக்குப் பிறகு, அதாவது 450 மணிநேரங்களுக்குப் பிறகு, இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்ட கணவன் - மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஹெட் மாகாணத்தின் தலைநகரான அன்டாக்யாவில் இடிபாடுகளில் புதைந்திருந்தனர். அவர்கள் சமீர் முஹம்மது அக்கர் (49), அவரது மனைவி ரக்தா (40) மற்றும் அவர்களது 12 வயது மகன் என அடையாளம் காணப்பட்டனர். மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு தம்பதியின் மகன் இறந்து விட்டான். இந்த புதிய இறப்புகளுடன், துருக்கி - சிரியா பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 46,000 ஐ தாண்டியுள்ளது.

கானா கால்பந்து வீரர் மரணம்

அன்டாக்யா நகரில், கானாவைச் சேர்ந்த 31 வயது கால்பந்து வீரரின் சடலமும் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வீரரின் பெயர் கிறிஸ்டியன் அட்சு. அவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப்களான செல்சியா மற்றும் நியூகேஸில் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அட்சுவின் மேலாளர் கூறுகையில், தேடுதல் குழுக்கள் அட்சுவின் உடலை அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். தற்போது அவரது உடைமைகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர் செப்டம்பரில் துருக்கி கிளப் ஹடாய்ஸ்போருடன் இணைந்து பணியாற்றி வந்தார். பூகம்பத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பிப்ரவரி 5 அன்று காசிம்பாசா எஸ்கேக்கு எதிராக ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றியைக் கொடுத்தார்.

மேலும் படிக்க | Turkey Earthquake 248 மணி நேரத்திற்கு பிறகும் உயிருடன் மீட்கப்படும் அதிர்ஷ்டசாலிகள்

அட்சுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த கிளப் 

அட்சுவின் மரணத்திற்கு அவரது கிளப் ஹடாய்ஸ்போர் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வருத்தத்தை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை என்று கிளப் தெரிவித்துள்ளது. அவர் ஒரு சிறந்த வீரர் மற்றும் அவரது வருகை அணிக்கு உற்சாகத்தை அளித்தது என்று கூறப்பட்டுள்ளது. துருக்கியே பூகம்பத்திற்குப் பிறகு அட்சு காணாமல் போன நிலையில், அவர் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என முன்னதாக அறிவிப்பு வெளியானது. மீட்புக் குழுவினர் அங்கு சென்றும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

மேலும் படிக்க | 5,000 ஆண்டுகள் பழமையான ஹோட்டலை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!

மேலும் படிக்க | எகிப்தின் 4300 ஆண்டு பழமையான தங்க மூலாம் பூசப்பட்ட மம்மி கண்டுபிடிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News