ராணிக்கு அஞ்சலி செலுத்த 4 கி.மீ தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Queen Elizabeth : ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.  

Written by - Chithira Rekha | Last Updated : Sep 15, 2022, 03:15 PM IST
  • ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி
  • 4 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் நிற்கும் மக்கள்
  • மழையையும் பொருட்படுத்தாது காத்திருப்பு
ராணிக்கு அஞ்சலி செலுத்த 4 கி.மீ தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள் title=

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக கடந்த 8-ம் தேதி தனது 96-வது வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து, எடின்பரோ நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் அரச குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு நேற்று லண்டன் கொண்டு வரப்பட்டது. 

அங்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் அதிகாரிகளும், அரண்மனை பணியாளர்களும் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு ராணுவ மரியாதையுடன்  ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில், அரச குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அரச குடும்பத்தை விட்டு வெளியேறி கலிஃபோர்னியாவில் வசித்து வரும் இளவரசர் ஹாரி இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க | ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்த 2 நாட்களாகக் காத்திருக்கும் பெண்

Queue for Queen

 

வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில், ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். சுமார் 4 கி.மீ. தொலைவிற்கு வரிசை நீண்டுள்ள நிலையில், 16 கி.மீ. வரை நீள வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையையும் பொருட்படுத்தாது ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.

ராணியின் இறுதிச்சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் உலகின் பல்வேறு தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உள்ளிட்டோர் ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ராணியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்கிறார். ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  

மேலும் படிக்க | எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News