வங்கி லாக்கர் ஒப்பந்தம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு!

bank locker renewals: ரிசர்வ் வங்கி வங்கி லாக்கர் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) இப்போது டிராஃப்ட் மாடல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Jan 25, 2023, 06:57 AM IST
  • காலக்கெடுவை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்த ரிசர்வ் வங்கி.
  • தற்போது ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • முன்னர் இந்த காலக்கெடு ஜனவரி 1 என இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி லாக்கர் ஒப்பந்தம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு! title=

ரிசர்வ் வங்கி தற்போது வங்கி லாக்கர்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை தரக்கூடிய ஒரு முக்கியமான செய்தியினை வழங்கியுள்ளது.  அதாவது வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31, 2023 வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது, முன்னர் இந்த காலக்கெடு ஜனவரி 1 என இருந்தது குறிப்பிடத்தக்கது.  பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இன்னும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும், லாக்கர்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியதன் அவசியத்தை வங்கிகள் இன்னும் சரிவர தெரிவிக்கவில்லை என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும் படிக்க | Budget 2023: மாத சம்பளம் பெரும் நபரா நீங்கள்? பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு, விவரம் இதோ

தற்போது ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) இப்போது டிராஃப்ட் மாடல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.  இதை ஈடுகட்ட ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 30, 2023க்குள், வங்கிகள் தங்கள் ஒவ்வொரு லாக்கர்-கீப்பிங் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  ஜூன் 30, 2023க்குள், தற்போதைய வாடிக்கையாளர்களில் 50 சதவீதம் பேர் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், செப்டம்பர் 30, 2023க்குள் 75 சதவீத நுகர்வோர் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.  ஸ்டாம்ப் பேப்பர் வழங்குதல், ஃபிராங்கிங் செய்தல், மின்னணு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல், இ-ஸ்டாம்பிங் செய்தல் மற்றும் ஒப்பந்தங்களின் நகல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல் போன்ற புதிய ஒப்பந்தங்களை வாடிக்கையாளர்களுக்கு எளிதாக்குவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.  

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில்,  ஐபிஏ மாதிரி ஒப்பந்தத்தை மதிப்பாய்வு செய்து அப்டேட் செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.  தற்போது வாடிக்கையாளர்கள் வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2022 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் பிற சேனல்கள் மூலம் லாக்கர் கட்டுப்பாடுகளில் மாற்றம் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.  புதிய விதியின்படி, இயற்கைப் பேரிடர் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக லாக்கர் சேதமடைந்தால், இழப்பீட்டுக்கு வங்கி பொறுப்பேற்காது.  லாக்கரை வைத்திருக்கும் வாடிக்கையாளர் இறந்துவிட்டால், லாக்கர் வசதியை நாமினி எடுத்துக்கொள்வார்.

மேலும் படிக்க | வாடிக்கையாளர்களே அலெர்ட்! அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் திறக்கப்படாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News