சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஒரு இலை போதும்

Neem For Diabetes: மருத்துவ மரம் என்று அழைக்கப்படும் வேம்பு, பல பிரச்சனைகளை நீக்குகிறது. வேப்ப இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இது தவிர பல நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 18, 2022, 01:17 PM IST
  • வேம்பில் வைட்டமின் சி மற்றும் பல ஃபிளாவனாய்டுகள் உள்ளன.
  • வேம்பு நோய்க்கிருமி பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்லும் திறன் கொண்டது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஒரு இலை போதும் title=

வேப்பமரத்தில் நீரிழிவு எதிர்ப்பு பண்பு உள்ளது: சுற்றுச்சூழலை நன்றாக வைத்திருக்கும் வேம்பு, நம் நாட்டில் உள்ள பெரும்பாலான வீட்டின் வெளியே காணப்படும். நல்ல சுற்றுச்சூழலுக்கு வேப்ப மரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நல்ல ஆரோக்கியத்திற்கும் இது முக்கியமானது. பொதுவாக ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, வேம்பு வீட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பலர் வேப்ப இலைகளை சாப்பிடுவதால், ஆரோக்கியம் பல நன்மைகளைப் பெறுகிறது. இது தவிர உடல் தொடர்பான எந்த ஒரு பிரச்சனையையும் போக்க வேப்ப மரத்தின் குச்சிகள் பயன்படுகிறது. எனவே வேப்பிலையை உண்பதால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி மற்ற நன்மைகளும் இது ஏற்படுகிறது. அவை என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

நீரிழிவு கட்டுப்பாட்டு
ஸ்டைல்கிரேஸின் படி,  வேப்ப இலைகள் கசப்பானவை. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு அல்லது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் வேம்பு இன்று பல அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இது சருமம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வாகும். மொத்தத்தில், வேப்ப இலையை ஆயுர்வேதத்தின் வரம் என்று கூறலாம்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!

வேப்ப இலைகளை சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்

* வேப்ப இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது.
* சுவாசம் தொடர்பான பிரச்சனை இருந்தால், வேப்ப இலைகளை உட்கொள்வது நன்மை பயக்கும்.
* வேப்ப மரப்பட்டை சாறு இரைப்பை அதி அமிலத்தன்மையை போக்க உதவுகிறது.
* இது புண்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வேம்பு வாய் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்கிறது.
* வேம்பு உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
* தொழுநோய் குணப்படுத்த வேம்பு இலை பயன்படுத்தப்படுகிறது.
* மலேரியாவுக்கு வேம்பு சிறந்த சிகிச்சையாகும்.
* வயிற்றின் ஆரோக்கியத்தையும் வேம்பு கவனித்துக்கொள்கிறது.
* கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் வேம்பு அதன் சிகிச்சையாக இருக்கலாம்.
* வேப்பம்பூவை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயைத் தடுக்க உதவும்.

வேப்பிலை ஜூஸ் செய்வது எப்படி

தேவையான பொருள்:
அரை கப் வேப்ப இலைகள்
ஒரு கப் தண்ணீர்

செய்முறை:
வேப்பிலை ஜூஸ் தயாரிக்க பச்சை மற்றும் புதிய வேப்பை இலைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் அனைத்து வேப்ப இலைகளையும் நன்கு கழுவவும்.
இப்போது மிக்ஸியில் போட்டு மேலே தண்ணீர் ஊற்றவும்.
அதன் பிறகு நன்றாக மெல்லியதாக வரும் வரை அரைக்கவும்.
இப்போது அதை வடிகட்டி, உட்கொள்ளலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் அருமையான வழிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News