இளம் வயதிலேயே அதிக நரைமுடியா? இந்த ஸ்பெஷல் எண்ணெய்யை யூஸ் பண்ணுங்க!

White Hair Problem: தற்போது சிறு வயதிலேயே பலருக்கும் வெள்ளை முடி பிரச்சனை இருந்து வருகிறது.  இதனை சில எண்ணெயின் மூலம் சரி செய்யலாம்.  

Written by - RK Spark | Last Updated : Feb 14, 2024, 02:45 PM IST
  • நரைமுடி பிரச்சனை பலருக்கும் உள்ளது.
  • சில வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்யலாம்.
  • நரை முடியை எளிதாக சரி செய்ய முடியும்.
இளம் வயதிலேயே அதிக நரைமுடியா? இந்த ஸ்பெஷல் எண்ணெய்யை யூஸ் பண்ணுங்க! title=

White Hair Problem: இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனை தற்போது அதிகரித்து வருகிறது.  நரை முடி என்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. நரை முடி காரணமாக சிலருக்கு மனசோர்வு உண்டாகி, வாழ்க்கையை வெறுத்து விடுகின்றனர். மேலும் இதனை சரி செய்ய பல்வேறு வகையான சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இவற்றை மறைக்க, பல்வேறு ரசாயனங்கள், சாறுகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால் சிலருக்கு முடி உதிர்தல் (Hair Fall), முடி உடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே உங்கள் முடியை இயற்கையாகவே பராமரிக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். 
முடியின் கருமையை பராமரிக்க சில தீர்வை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் மூலம் நீங்கள் நரை முடியை எளிதாக சரி செய்ய முடியும்.  மேலும் இதன் மூலம் முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற முடியும்.

மேலும் படிக்க - அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க மஞ்சள் ஒன்று போதும்

முடி நரைப்பதற்கான காரணம்

உடலில் உள்ள மெலனின் அளவு குறையும் போது அவை முடியை பாதிக்கிறது. இவை தான் முடிக்கு கருமையான நிறத்தை தருகிறது. இந்த மெலனின் உடலில் குறையும் போது நமது முடியின் நிறம் மாறுகிறது. இதன் காரணமாக நரைமுடி பிரச்சனை பலருக்கு உண்டாகும்.  மேலும், முடி நரைப்பதற்கு நமது உணவு முறை மட்டுமே காரணமாக இருப்பதில்லை. நமக்கு வரும் நோய்கள் நாளும் நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது.  நரை முடி பிரச்சனை ஏற்பட்டால், மீண்டும் பழையபடி கருமையான கூந்தலை பெற அதிக டென்ஷன் ஆக வேண்டியதில்லை.  ஏனென்றால் இயற்கையாகவே உங்கள் முடியை மீண்டும் கருமையாக மாற்றலாம்.  

நரைமுடி பிரச்சனைக்கு தீர்வு

ஒரு கப் கடுகு எண்ணெயையில், ஒரு கிளாஸ் தண்ணீர், கற்றாழை, கலோஞ்சி, ஆளி விதை, கறிவேப்பிலை மற்றும் கருப்பு சீரகம் ஆகியவற்றை ஒன்றாக வைத்து கொள்ளவும். இந்த பொருட்களை வைத்து ஸ்பெஷல் மூலிகை எண்ணெயை ரெடி பண்ணலாம்.  ஒரு கிளாஸ் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, கறிவேப்பிலை, கற்றாழைத் துண்டு, ஆளி விதை, கருஞ்சீரகம், கலோஞ்சி ஆகியவற்றை தண்ணீரில் போடவும். நன்கு கொதிக்கும் வரை அதனை கொத்திக்க விடவும். பின்னர் ​​தண்ணீரில் கடுகு எண்ணெய் சேர்த்து கொத்திக்கவிடவும். பின்னர் இந்த எண்ணெயை வாரம் இரண்டு முறை உங்கள் முடியில் தடவவும்.  இதன் மூலம் நரை முடி பிரச்சனையை எளிதில் சரி செய்யலாம்.  

இந்த மூலிகை எண்ணெயை மூலம் உதிர்ந்த முடி, உடைந்த முடியை மீண்டும் வளர செய்யலாம். முடி உதிர்வு குறையும் போது, தலையில் ஏற்படும் தொற்று அபாயமும் குறையும், எனவே இந்த எண்ணெயை உங்கள் முடிக்கு தடவி பாருங்கள்.  மேலும் நெல்லிக்காய், கறிவேப்பிலை, பாதாம்,  கடுகு எண்ணெய் மூலமும் நரை முறையை சரி செய்யலாம்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க - ஓட்டப்பயிற்சி Vs நடைப்பயிற்சி: உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவுவது எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News