குலாம் காஷ்மீர் வழக்கில் நேரு அரசு தவறு செய்துவிட்டது -சு.சுவாமி!

பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, குலாம் காஷ்மீர் (PoK) வழக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜவஹர்லால் நேரு, அரசு சார்பாக அனுப்புவது மிகப்பெரிய தவறு என தெரிவித்துள்ளார்!

Last Updated : Aug 24, 2019, 06:17 PM IST
குலாம் காஷ்மீர் வழக்கில் நேரு அரசு தவறு செய்துவிட்டது -சு.சுவாமி! title=

பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, குலாம் காஷ்மீர் (PoK) வழக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜவஹர்லால் நேரு, அரசு சார்பாக அனுப்புவது மிகப்பெரிய தவறு என தெரிவித்துள்ளார்!

நாட்டின் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி இந்த முன்மொழிவு ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்டது, எனவே இது சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும் எனவும், விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று (ஆகஸ்ட் 24) பிரிவு 10-ல் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார பெருமை மன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது தனது கருத்தை பதிவு செய்த அவர், "ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை அமல்படுத்துமாறு சர்தார் வல்லபாய் படேல் கேட்டுக் கொண்டதாவும், தற்காலிகமான இந்த சட்டபிரிவு பின்னர் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் என்ற நிபந்தனையின் பேரில் அமல் படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும்" சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும், குலாம் காஷ்மீர் (PoK) வழக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்., தற்போது குலாம் காஷ்மீர்(PoK) இந்தியாவை எடுக்க விரும்புகிறது, அவர் இந்த விஷயத்தை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியே எடுக்க வேண்டியது அவசியம். இந்தியா விரைவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு தீர்மானத்தை அனுப்பும். 

குலாம் காஷ்மீர்(PoK) இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து பாகிஸ்தானால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டது எனவும் அவர் பேசினார். 

இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிரண் கெர் மற்றும் கர்னல் கே.ஜே.சிங் மற்றும் பஞ்சாப் முன்னாள் டிஜிபி சுமேத் சிங் சைனி ஆகியோரும் கலந்து கொண்டனர். 

Trending News