இந்த மாநிலத்தில் பரவும் மர்ம நோய், 1 பலி; ஆபத்தான நிலையில் 292 பேர்

ஆந்திராவில் ஏலுறு மாவட்ட நிர்வாகத்தில் திடீர் மர்ம நோய் காரணமாக பீதி நிலவுகிறது. 

Last Updated : Dec 7, 2020, 12:25 PM IST
    1. ஆந்திராவில் மர்ம நோய் தாக்கம்
    2. கொரோனா வைரஸ் தொற்றுநோய் சூறையாடி வருகிறது.
    3. 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநிலத்தில் பரவும் மர்ம நோய், 1 பலி; ஆபத்தான நிலையில் 292 பேர் title=

புது டெல்லி: உலகின் பெரும்பாலான நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் சூறையாடி வருகிறது. இதற்கிடையில், இந்தியாவின் ஆந்திராவில் கொரோனா தவிர, ஒரு மர்ம நோய் மக்களையும் பீதி அடைய செய்துள்ளது.

ஆந்திராவில் (Andhra Pradesh) ஒரு புதிய மர்ம நோய் (Mysterious Disease) பரவத் தொடங்கியது. ஆந்திராவின் ஏலுறு  மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை இந்த மர்ம நோயால் ஒருவர் இறந்தார், மேலும் 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்ட சுகாதார அதிகாரி கூறுகையில், குணமடைந்த 140 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ALSO READ | போதிய தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன தெரியுமா?

குறிப்பிடத்தக்க வகையில், எந்த நோயால் மக்கள் திடீரென நோய்வாய்ப்பட்டார்கள், சுகாதார அதிகாரிகளால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிப்பு மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகள் உள்ளன. இந்த மர்ம நோயால் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 45 வயது நபர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

இந்த மர்ம நோயால், ஏலுறு மாவட்ட நிர்வாகத்தில் ஒரு பீதி நிலைமை உள்ளது. ஆதாரங்களில் இருந்து வந்த செய்திகளின்படி, பெரும்பாலான மக்கள் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு சில நிமிடங்களில் குணப்படுத்தப்பட்டனர். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவர்கள் குழு ஏலுறுவை அடைந்துள்ளது. இது தவிர, வீடு வீடாக கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படுகிறது.

ALSO READ | வாயு பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய வழிமுறைகள்...

இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கண்ட பாஜக எம்.பி ஜி.வி.எல் நரசிம்மராவ் (G. V. L. Narasimha Rao) முதன்மை செயலாளர் நீலம் சாஹ்னியுடன் தொலைபேசியில் பேசினார். இதன் பின்னர், மல்கங்கிரி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையைச் சேர்ந்த 5 மருத்துவர்கள் அடங்கிய குழு நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக எலுருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த விவகாரம் குறித்து டெல்லியைச் சேர்ந்த எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுடன் (Randeep Guleria) பேசியுள்ளதாகவும், மேற்கு கோதாவரி மாவட்ட சுகாதார அதிகாரிகளிடமும் பேசியதாகவும் எம்.பி. நரசிம்ம ராவ் தெரிவித்தார். சில விஷப் பொருள்களால் இந்த நோய் பரவியிருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News