பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமனம்

Last Updated : Oct 4, 2017, 06:49 PM IST
பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமனம் title=

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக தற்போது இருக்கும் அருந்ததி பதாச்சாரியாவின் பதவிக்காலம் இந்த மாதம் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த சில மாதமாக அமைச்சரவை ஆலோசித்து வந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சரவையின் நியமன குழு இன்று அறிவித்தது. 

இதையடுத்து பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைவர் பொறுப்பில் 3 ஆண்டுகள் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News