7th Pay Commission: இந்த 4 கொடுப்பனவுகள் அதிகரிக்கும், சம்பளம் உயரும்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி!! பல நாட்களாக ஊழியர்கள் காத்திருந்த பல விஷயங்கள் தொடர்பான தீர்வுகளை அவர்கள் விரைவில் பெறக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 28, 2022, 05:49 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஃபிட்மென்ட் ஃபேக்டரால் தீர்மானிக்கப்படுகிறது.
  • ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும்.
  • இதனால் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.
7th Pay Commission: இந்த 4 கொடுப்பனவுகள் அதிகரிக்கும், சம்பளம் உயரும் title=

7வது ஊதியக் கமிஷன் சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி!! பல நாட்களாக ஊழியர்கள் காத்திருந்த பல விஷயங்கள் தொடர்பான தீர்வுகளை அவர்கள் விரைவில் பெறக்கூடும். மத்திய அரசு சமீபத்தில் 3% அகவிலைப்படி உயர்த்தியது. இதற்குப் பிறகு, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தற்போது ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போகிறது. மேலும் ஊழியர்களின் 4 கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த கொடுப்பனவுகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். இந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, தற்போது மற்ற அலவன்ஸ்களும் அதிகரிக்கப்பட உள்ளன. ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் மீண்டும் உயரும். அகவிலைப்படியை உயர்த்திய பிறகு, ஊழியர்களின் பயணப்படி மற்றும் நகரப் படியும் அதிகரிக்கப்படும். டிஏ உயர்வுக்குப் பிறகு, டிஏ மற்றும் சிஏ அதிகரிப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்த முக்கிய அப்டேட், விரைவில் சம்பள உயர்வு? 

இது தவிர, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடையும் அதிகரிக்கும். மத்திய ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப் மற்றும் பணிக்கொடை அடிப்படை ஊதியம் மற்றும் டிஏவில் இருந்து கணக்கிடப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி அதிகரிப்பால், பிஎஃப் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவையும் அதிகரிப்பது உறுதி.

அகவிலைப்படி உயர்வு காரணமாக, மத்திய ஊழியர்களின் வீட்டு வாடகைப் படி, அதாவது ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ், பயணப் படி ஆகியவற்றில் உறுதியான உயர்வு உள்ளது. ஊழியர்கள் ஒரே நேரத்தில் நான்கு கொடுப்பனவுகளின் அதிகரிப்பின் பலனைப் பெறலாம். கடந்த 9 மாதங்களில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இப்போது பணியாளர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் 34% விகிதத்தில் டிஏ மற்றும் டிஆர் பெறுகிறார்கள். 

அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். மறுபுறம், இது அரசுக்கு ஆண்டுக்கு 9455.50 கோடி சுமையை அதிகரிக்கும். இதுதவிர மத்திய ஊழியர் அமைப்பும் 18 மாத நிலுவைத் தொகைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. சம்பளம், கொடுப்பனவு ஆகியவை ஊழியரின் உரிமை என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என ஊழியர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியீடு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News