பிறந்த கிழமை உங்கள் குணாதிசயத்தை எடுத்து சொல்லும்..!!!

ஒரு நபரின் பிறந்த கிழமை அவரது ஆளுமை மற்றும் எதிர்காலம் பற்றிய பல விஷயங்களை கூறுகிறது. பிறந்த கிழமையை வைத்து குணாதிசயங்களைக் அறிந்து கொள்ளலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 14, 2021, 02:40 PM IST
  • பிறந்த கிழமையை வைத்து குணாதிசயங்களைக் அறிந்து கொள்ளலாம்.
  • ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் தைரியசாலிகள்.
  • சனிக்கிழமையில் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள்.
பிறந்த கிழமை உங்கள் குணாதிசயத்தை எடுத்து சொல்லும்..!!! title=

புதுடெல்லி: ஜோதிடத்தில் ராசி மூலமாகவும், எண் ஜோதிடம் மூலமாகவும், கைரேகைகள் மூலமாகவும் நபரின் இயல்பு மற்றும் எதிர்காலம் அறியப்படுகிறது. அதேபோல், பிறந்தகிழமையிலிருந்தும் ஒருவரின் ஆளுமையைப் பற்றியும் குணாதிசயத்தை பற்றியும் நிறைய தெரிந்து கொள்ளலாம். வாரத்தின் ஏழு நாட்களும், சில கிரகங்கள், தெய்வங்களுடன் தொடர்புடையவை. எனவே, வெவ்வேறு நாட்களில் பிறந்தவர்களின் குணாதிசயங்களும் வேறுபட்டவை.

திங்கட்கிழமை: திங்கட்கிழமை பிறந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள், கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள் மற்றும் தைரியமானவர்கள். இந்த நாள் சந்திரனுக்கு உரியது என்பதால், இந்த நாளில் பிறந்தவர்களின் மனம் ஒரே நேரத்தில் பல காரியங்களில் ஈடுபடும். அதனால்தான் அவர்களின் விருப்பு வெறுப்புகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. அவர்களின் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

செவ்வாய்: இந்த நாளில் பிறந்தவர்கள் மிதமான தன்மை கொண்டவர்கள், வலிமை மிக்கவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் இயற்கையிலேயே ஒழுக்கமானவர்கள்.அவர்கள் மனது சுத்தமாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் தன்மையுடனும் இருக்கிறார்கள். இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் அடைய பெரிதும் விரும்பவர்களாக இருப்பார்கள்.

ALSO READ | இந்த 4 ராசிக்காரர்களை மட்டும் சனி பகவான் அதிகம் படுத்துவார்: காரணம் என்ன? பரிகாரம் என்ன?

புதன்: புதன் கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் திறமைசாலிகள். அருமையான பேச்சு நடை உடையவர்கள். இந்த மக்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். 

வியாழன்: வியாழன் அன்று பிறந்தவர்கள் தைரியசாலிகள், புத்திசாலிகள் மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவர்கள். அவர்கள் தங்களை மிகவும் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். முதல் சந்திப்பிலேயே மக்கள் தங்கள் இதயங்களை பறிகொடுப்பார்கள். சவால்களை எதிர்கொள்ளும் அற்புதமான திறமை அவர்களிடம் உள்ளது. விஷ்ணுவின் அருளால் ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் அடக்கமானவர்கள், அவர்கள் அன்னை லட்சுமியின் அருளைப் பெறுவார்கள். இவர்களும், வசதியான ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால் வாழ்க்கையில் நிறைய சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை இருக்கும். இந்த நபர்கள் அடிக்கடி துணையை மாற்றுபவர்கள்.

சனிக்கிழமை: சனிக்கிழமையில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசி பெற்றவர்கள். இந்த மக்கள் சீக்கிரம் கோபப்படுவார்கள்; உணர்ச்சிவசப்படுவார்கள்.  கையில் எந்த வேலை இருந்தாலும் அதை முடித்த பிறகுதான் மூச்சு விடுகிறார்கள். இந்த மக்கள் தங்கள் கடின உழைப்பால் தங்கள் விதியை மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்கள் மிகவும் நேர்மையானவர்கள்.

ஞாயிறு: ஞாயிறு என்பது சூரியனின் நாள். இந்த நாளில் பிறந்தவர்கள் பிரகாசமான, தைரியமானவர்கள்; மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். இந்த மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். வாழ்க்கையில் எந்த விதமான அடிமைத்தனத்திலும் இருக்க விரும்புவதில்லை. இந்த மக்கள் கலைத் துறையில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.) 

ALSO READ | சனி பெயர்ச்சி; அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் எவை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News