ரயில் பயணத்தில் இவர்களுக்கு உணவு, தண்ணீர் இலவசம்! 90% பேருக்கு தெரிவதில்லை

ரயில் பயணத்தில் உணவு மற்றும் தண்ணீர் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இது பல பயணிகளுக்கு தெரிவதில்லை.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 2, 2023, 09:36 PM IST
  • ரயில் பயணிகளுக்கு இலவச உணவு
  • இந்த விதிமுறை பயணிகளுக்கு தெரியாது
  • தாமதமானால் உணவு இலவசமாக வாங்கலாம்
ரயில் பயணத்தில் இவர்களுக்கு உணவு, தண்ணீர் இலவசம்! 90% பேருக்கு தெரிவதில்லை title=

இந்திய ரயில்வே பயணிகளுக்காக பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் செய்து கொடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் இருக்கும் ரயில்வேயில், சலுகைகள் உள்ளிட்டவை குறித்து பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. ரயில் தாமதமாக வந்தால் ​​பயணிகளுக்கு இலவச உணவு, தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை ரயில்வே வழங்குகிறது. இந்த திட்டத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்? தெரிந்து கொள்ளுங்கள்.

இலவச உணவு திட்டம்

ரயில் பயணிகளுக்கு பல வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் உரிமை, பெரும்பாலான மக்களுக்கு இந்த வசதிகள் பற்றி தெரியாது. அத்தகைய சூழ்நிலையில், இந்த விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ரயில் தாமதமாக வந்தாலோ அல்லது ஏதேனும் காரணத்தால் தாமதமாகினாலோ, இந்திய ரயில்வே பயணிகளுக்கு சிறப்பு வசதிகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | Business Idea: வெறும் ரூ.5,000 முதலீட்டில் பெரிய அளவில் சம்பாதிக்கலாம்!

பயணிகளுக்கான சலுகை

ரயில்வே விதிகளின்படி, ரயில் இரண்டு மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு இலவச காலை உணவு மற்றும் உணவு வழங்கப்படுகிறது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகியவை இதில் அடங்கும். குளிர்காலத்தில் பனிமூட்டம் காரணமாக, பல நேரங்களில் ரயில்கள் மணிநேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ரயிலும் தாமதமாக வந்தால், நீங்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், ரயில் தாமதமாக வந்தால், IRCTC இந்த வசதியை பயணிகளுக்கு வழங்குகிறது, ஆனால் உணவு உங்களை அடையவில்லை என்றால், நீங்கள் IRCTC யிடம் இந்த வசதியை கோரலாம்.

என்னென்ன உணவுகள்?

ரயில்வே காலை உணவுக்கு தேநீர் அல்லது காபி மற்றும் பிஸ்கட் வழங்குகிறது. மேலும், ஒரு பட்டர் சிப்லெட், நான்கு ரொட்டிகள் கொடுக்கப்படுகின்றன. மதியம் மதிய உணவு நேரத்தில் பருப்பு, ரொட்டி மற்றும் காய்கறிகள் வழங்கப்படும். சில சமயம் மதிய உணவிலும் பூரி பரிமாறப்படுகிறது.

மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ 50 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News