சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிகப்படியான தாக்கம், யாருக்கு ஆபத்து? யாருக்கு ஆதாயம்?

Sani Peyarchi: குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.   

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 29, 2022, 06:23 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு கடனில் இருந்து விடுபட நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த ராசி மாற்றம் சவால்களை கொண்டு வரும்.
  • அலுவலகம், குடும்பம் என அனைத்து இடங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிகப்படியான தாக்கம், யாருக்கு ஆபத்து? யாருக்கு ஆதாயம்? title=

சனிப்பெயர்ச்சி 2022: சனி பகவான் கலியுகத்தின் நீதிபதியாவார். அவர் மனிதர்களின் கர்மாவுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கிறார். சுமார் இரண்டரை வருடங்களாக சனியின் ராசி மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர். 

இன்று அதாவது 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மதியம் சனி பகவான் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்கு பிரவேசித்துள்ளார். குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ரிஷபம்:

சனியின் ராசி மாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமையப் போகிறது. வேலையில் வெற்றி பெற நீண்ட நாட்களாக போராடி வந்தவர்களுக்கு இந்த சனியின் ராசி மாற்றம் நல்ல பலன்களை அளிக்கும். உங்கள் திறமை பாராட்டப்படும். 

அலுவலகத்தில் உங்களது பணியை அலட்சியப்படுத்தியவர்கள் இனி அப்படி செய்ய மாட்டார்கள். உங்களது வேலைத்திறன் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடனில் இருந்து விடுபட நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் புதிய வேலையைத் தொடங்கலாம். காதல் உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். ரிஷப ராசிக்காரர்கள் அனைத்து வேலைகளிலும் பொறுமை காக்க வேண்டும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த ராசி மாற்றம் சவால்களை கொண்டு வரும். கடக ராசிக்காரர்களுக்கு சனி தசை ஆரம்பிக்கும். சனி தசை செல்வம், ஆரோக்கியம் மற்றும் திருமண வாழ்க்கையை பாதிக்கும். இந்த நேரத்தில் பணச் செலவு அதிகமாகும். 

உடல் நலம் பாதிக்கப்படலாம். இந்த நேரம் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். எனவே மிகவும் கவனமாக இருங்கள். அலுவலகம், குடும்பம் என அனைத்து இடங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சியால் ராசிகளில் மிகப்பெரிய தாக்கம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம் 

துலாம்:

துலா ராசி, சனி பகவானின் உச்ச ராசியாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்களின் மீது சனிபகவானின் அசுப பார்வை உள்ளது. துலா ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் சனி தசையின் தாக்கத்தில் உள்ளார்கள். எனினும் இந்த ஆண்டு சனி தசையில் இருந்து விடுதலை பெறுவார்கள். துலா ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சனி தசையில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். 

விருச்சிகம்:
ஏப்ரல் 29, 2022, அதாவது இன்று முதல், விருச்சிக ராசியிலும் சனி தசை தொடங்கப் போகிறது. விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த காலகட்டத்தில் சனி தசையால் உங்கள் கோபம் அதிகரிக்கும். தவறான முடிவால் வாழ்க்கை பாதிக்கப்படலாம். 

மிகவும் கவனமாக பணிகளை திட்டமிடுங்கள். கவனிக்காமல் இருந்தால் திட்டம் தோல்வியடையலாம். பண விஷயத்தில் சிறப்பு கவனம் தேவை. வாழ்க்கை துணையை கவனமாக பார்த்துக்கொள்ளவும். சச்சரவுகளையும் பதட்டங்களையும் தவிர்க்கவும். சனிக்கிழமையன்று சனிபகவானை வழிபட்டால் சனி தசையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

தனுசு:
கும்ப ராசியில் சனியின் சஞ்சாரத்தால், தனுசு ராசிக்காரர்கள் சனியின் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவார்கள். பண வரவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் நோயிலிருந்து விடுபட்டு வாழ்வில் மகிழ்ச்சியும், செழுமையும், செல்வமும் பெறுவார்கள். 

தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக தடை பட்டிருந்த பல வேலைகள் இப்போது நடக்கும். திருமணம் ஆகாமல் இருந்த தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது திருமண யோகம் உள்ளது. இவர்களது குடும்ப வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் மிகவும் நன்றாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News