2022-ல் சனி மற்றும் ராகு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்

சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அதிர்ஷ்டமான ஆண்டாக அமையப் போகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு பெற்ற அந்த ராசிகள் எவை என இந்த பதிவில் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2022, 07:01 PM IST
  • 2022 ஏப்ரலில் சனி பெயர்ச்சி ஆன பிறகு சில ராசிக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
  • சனி பெயர்ச்சி ஆன பிறகு ராகு பெயர்ச்சியும் நடக்கும்.
  • ரிஷப ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள்.
2022-ல் சனி மற்றும் ராகு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் title=

Horoscope 2022: புத்தாண்டு பிறந்துவிட்டது. ஜோதிடக் கணக்கீடுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு சிலருக்கு அமோகமாக இருக்கும், சிலருக்கு சுமாராக இருக்கும்.  புதிய தீர்மானங்களுடனும் புதிய நம்பிக்கையுடனும் மக்கள் புத்தாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளனர். வெற்றி, பணம், வேலை, முன்னேற வேண்டும் என்ற ஆசை என பல வித கனவுகள் அனைவரின் மனதிலும் உள்ளது. பலர் வெற்றி பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். 

சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அதிர்ஷ்டமான ஆண்டாக அமையப் போகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு பெற்ற அந்த ராசிகள் எவை என இந்த பதிவில் காணலாம். சனியின் ராசி மாற்றத்தால் நிவாரணம் கிடைக்கும்

சில ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். 2022 ஏப்ரலில் சனி பெயர்ச்சி ஆன பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) நிம்மதி கிடைக்கும். சனிப்பெயர்ச்சியால் பிரச்சனைகள் தீர்ந்து, நடக்காமல் இருந்த பல பணிகள் நிறைவேறும். 

ராகுவின் அசுப பலன்கள் நீங்கும்

சனி பெயர்ச்சி ஆன பிறகு ராகு பெயர்ச்சியும் நடக்கும். ஏப்ரலில் சனி பகவான் தனது ராசியை மாற்றுவார். அதன் பிறகு ராகு தனது ராசியிலிருந்து 12 ஜூலை 2022 அன்று மாறுகிறார். அதன் பிறகு பலருக்கு பல பணிகளில் இருந்த தடங்கல் நீங்கிவிடும். ரிஷப ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள்.

ரிஷப ராசி

கடந்த வருடங்களில் சிரமப்பட்டு வந்த ரிஷப ராசிக்காரர்கள் தற்போது பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடுவார்கள். தற்போது ராகு ரிஷப ராசியில் இருப்பதால் 2022 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி இந்த ராசியிலிருந்து பெயர்ந்து மேஷ ராசியில் நுழைகிறார். ராகு கிரகத்தை விட்டு வெளியேறியவுடன், ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். எனவே, 2022-ம் ஆண்டு அவர்களுக்குப் பலன் அளிக்கப் போகிறது. தொழிலில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விலகி இருங்கள். 

மிதுன ராசி

மிதுன (Gemini) ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு நல்ல செய்திகளைக் கொண்டு வரப் போகிறது. இந்த வருடம் சனியின் மோசமான தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். 29 ஏப்ரல் 2022 அன்று சனி தனது ராசியிலிருந்து மாறுகிறார். இத்துடன் இந்த ராசிக்காரர்களின் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கோபத்தையும் ஆணவத்தையும் தவிர்க்கவும். மேலும், வயதானவர்கள் மற்றும் பெண்களை மதிக்கவும்.

மீன ராசி

மீன (Pisces) ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் கிரக நிலை மிகவும் சாதகமாக உள்ளது. மீன ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் பதவி உயர்வு, அதிக லாபம் ஆகியவை கைகூடும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, மீன ராசிக்காரர்களுக்கு வருடம் முழுவதும் வெற்றிகரமானதாக இருக்கும். சுயநலவாதிகள் மற்றும் ஏமாற்றுக்காரர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | திருமணத் தடையை உண்டாக்கும் கால சர்ப்ப தோஷம்; பரிகாரம் என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News