ரஜினியின் கேரக்டர் சீக்ரெட்டை சொன்ன ஜெயிலர் பட நடிகர்... என்ன தெரியுமா?

Jailer Updater: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் ஜெயிலர் படத்தில், அவரின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் குறித்து அப்படத்தில் நடித்த நடிகர் வசந்த் ரவி தெரிவித்துள்ளார்.   

Written by - Sudharsan G | Last Updated : Apr 19, 2023, 08:51 AM IST
  • இப்படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
  • படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைகிறது.
ரஜினியின் கேரக்டர் சீக்ரெட்டை சொன்ன ஜெயிலர் பட நடிகர்... என்ன தெரியுமா? title=

Jailer Updater: சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் பெரிதும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து, டாக்டர், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் படம் வெற்றியடைந்து, வசூலை அள்ளியது. இருப்பினும், பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. மாறாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஜெயிலர் என பெயரிடப்பட்ட இப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் காட்சிகள் ரஜினியின் பிறந்தநாளான டிச. 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. 

ஜெயிலர் படத்தில், படையாப்பா படத்தில், நீலாம்பரியாக ரஜினியுடன் போட்டிபோட்டு நடித்த ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளார். மேலும், கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, யோகி பாபு, பிரியங்கா மோகன், வசந்த ரவி ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். இதிலும், சிறப்பு தோற்றத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க |  இந்த இயக்குனர் மட்டும் வேண்டாம்.. அழுகாத நிலையில் கெஞ்சும் விஜய் ரசிகர்கள்!

படத்தின் படப்பிடிப்பு இந்த வார இறுதிக்குள் நிறைவடையும் என கூறப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நடிகர் வசந்த் ரவி, அப்படம் குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார். இவர் தரமணி, ராக்கி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடையே அறிமுகமானாவர். 

ஜெயிலர் படம் குறித்து வசந்த் ரவி கூறுகையில்,"168 படங்களில் இதுவரை ரஜினி நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை ரஜினிக்காக நெல்சன் வடிவமைத்திருக்கிறார்" என தெரிவித்துள்ளார். முத்துவேல் பாண்டியனாக ஒரு கண்டிப்பான ஜெயிலராக வரும் ரஜினி, குற்றவாளிகளிடம் கருணை காட்டும் ஒரு கதாபாத்திரமாகவும் இருப்பார் என தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றான ஜெயிலர், பண்டிகை தினங்கள் அல்லது நீண்ட விடுமுறை உள்ள வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | விஜய் வழியை பின் தொடரும் சிம்பு! இந்த விசயத்திலுமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News