Reality Show: புது வித அதிரடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளாரா சிம்பு?

'சர்வைவர்' என்ற, மிகவும் பிரபலமான சர்வதேச ரியாலிட்டி நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார் என கூறப்படுகின்றது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 16, 2021, 06:07 PM IST
  • நடிகர் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
  • சிம்பு தமிழில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
Reality Show: புது வித அதிரடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளாரா சிம்பு? title=

Kollywood News: தனது வித்தியாசமான பாணியாலும், நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர் நடிகர் சிம்பு. சிறு வயதிலிருந்தே தமிழ் சினிமாவோடு பயணிக்கும் இவர் பல வெற்றிப்படங்களை அளித்துள்ளார்.

தற்போது தன் எடையை குறைத்து ஃபிட்டாக காணப்படும் சிம்பு (Simbu), கோலிவுட்டின் மிகவும் பிசியான நடிகராக உள்ளார். சில நாட்களுக்கு முன்னர், தமிழின் பிரபலபான ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாசின் அடுத்த சீசனை சிம்பு தான் தொகுத்து வழங்கப்போகிறார் என வதந்திகள் பரவின. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் அரசியலில் பிசியானதால், அடுத்த சீசனை சிம்பு தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டது. எனினும், தற்போது கமல்ஹாசனே அடுத்த சீசனை தொகுத்து வழங்கவுள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், 'சர்வைவர்' என்ற, மிகவும் பிரபலமான சர்வதேச ரியாலிட்டி நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார் என கூறப்படுகின்றது.  

இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி (Reality Show) தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு தீவில் தங்க வைக்கப்பட்டு, நிகழ்ச்சி அங்கு படமாக்கப்படும். நிகழ்ச்சியின் விதிகளின்படி, போட்டியாளர்களுக்கு குறைந்தபட்ச வசதிகள் மட்டுமே வழங்கப்படும். மேலும் கூடுதல் பொருட்கள் மற்றும் வசதிகளைப் பெற அவர்கள் பல்வேறு பணிகளை (task) செய்து அவற்றில் வெற்றிபெற வேண்டும். 

ALSO READ: RJ Balaji: பிரபல இயக்குனருடன் இணைகிறாரா ஆர்ஜே பாலாஜி

இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது என்று அரிக்கைகள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் இது ஒரு பிரபலமான தமிழ் சேனலில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ் (Dhanush), சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு ஆகிய மூன்று டாப் ஹீரோக்களுடனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான அதிக வாய்ப்பு சிம்புவுக்கே இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இது நடந்தால், சிம்புவின் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. வெள்ளித் திரையில் மட்டும் பார்த்த தங்கள் அபிமான ஹீரோவை அவர்கள் சின்னத்திரையிலும் பார்க்கத் தொடங்குவார்கள்.

ALSO READ: Kollywood: பட்டையைக் கிளப்பும் பிரேம்ஜி படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட்லுக்: ஆச்சரியத்தில் கோடம்பாக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News