ஏழைரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

சனிபகவானின் அருளைப் பெறவும், ஏழைரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், சனி மகாதசையின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும்  செய்ய கூடிய சில எளிய பரிகாரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 22, 2022, 09:26 PM IST
  • சனி தோஷம் நீங்க பரிகாரம்.
  • சனி பகவான் பகையாகவோ, நீசமாகவோ இருந்தால், துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
  • சனி பகவானின் அருளைப் பெறுவது மிகவும் முக்கியம்.
ஏழைரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க  சில எளிய பரிகாரங்கள் title=

சனிபகவானின் அருளைப் பெறவும், ஏழைரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், சனி மகாதசையின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும்  செய்ய கூடிய சில எளிய பரிகாரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் பகையாகவோ, நீசமாகவோ இருந்தால்,  அவரது எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்து, துன்பங்களை அனுபவிக்க நேரிடும். சனி ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அவர் எல்லாவித வலங்களையும் பெற்று, நல்ல வாழ்க்கை வாழ்வார். எனவே  சனி பகவானின் அருளைப் பெறுவது மிகவும் முக்கியம்

சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, சனி அமாவாசை நாள் அன்று செய்யப்படும் பரிகாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது  ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள், சனி அமாவாசை அன்று கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.  

மேலும் படிக்க | ஆனி மாதத்தில் 5 பெயர்ச்சிகள்; பாதிப்பை நீக்கும் புதன் கிழமை பரிகாரங்கள்

சனி நீதியின் கடவுள் என்பதால், இந்த நேரத்தில் மக்கள் தவறான செயல்களைச் செய்தால், சனியின் அதிருப்தி அவர்களின் வாழ்க்கையை அழித்து விடும். இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும் அந்த நபர் மோசமான பலன்களைப் பெறுகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், சனி அமாவாசை நாளில், இந்த ஐந்து ராசிக்காரர்கள் சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும்.

சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பரிகாரம்

சனி அமாவாசை அன்று  நதியில் நீராடினால் சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். இத்துடன் அனைத்து துன்பங்களும், பிரச்சனைகளும், தடைகளும் நீங்கி விடும்.

தேவை இருக்கும் ஒருவருக்கு தானம் செய்யுங்கள். அவருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது.

சனி பகவானின் சாலிசாவைப் படியுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது.

சனி அமாவாசை அன்று வீட்டில் சனி யந்திரத்தை நிறுவ மிகவும் நல்ல நாளாக கருதப்படுகிறது. இதனுடன் தினமும் வழிபடுவதால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி பணவரவு உண்டாகும்.

சனி தோஷம் நீங்க, கறுப்பு உளுந்து, கறுப்பு எள், இரும்பு ஆகியவற்றை கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இது நிவாரணம் தரும்.

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News