சுக்ரனின் அருளால் தீபாவளி முதல் பண மழையில் நனையப்போகும் ‘3’ ராசிகள்!

சுக்ரன் பெயர்ச்சி: அக்டோபர் 18, 2022 அன்று, சுக்ரன் கிரகம் துலாம் ராசிக்குள் பிரவேசிக்கப் போகிறது. சுக்கிரனின் ராசி மாற்றம் 3 ராசிக்காரர்களுக்கு பண பலன்களை அள்ளித் தரும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 9, 2022, 04:06 PM IST
  • சுக்கிரனின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
  • வியாபாரத்தில் அபரிமிதமான பணப் பலன்களைத் தரும்.
  • வருமானம் அதிகரிக்கும். பண வரவு மிகவும் சாதகமாக இருக்கும்.
சுக்ரனின் அருளால் தீபாவளி முதல் பண மழையில் நனையப்போகும் ‘3’ ராசிகள்! title=

ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்தின் ராசியும் மாற்றத்தின் நேரம், பலன்கள் ஆகியவை சொல்லப்பட்டுள்ளது. கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் ராசி மாற்றங்கள் அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், வரும் அக்டோபர் 18, 2022 அன்று, ஆடம்பரம், மகிழ்ச்சி, செல்வம், பொலிவு ஆகியவற்றைத் தரும் சுக்கிரன் தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். தான் இருக்கும் ராசியை மாற்றி துலாம் ராசியில் பிரவேசிக்கப் போகிறார். 2022 தீபாவளிக்கு முன், சுக்கிரனின் சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தரும். லக்ஷ்மி அன்னை எந்தெந்த ராசிகளுக்கு கருணை காட்டப் போகிறாள் என்பதை தெரிந்து கொள்வோம்.

கீழ்கண்ட ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் அபரிமிதமான பண பலன்களைத் தரும்:

கன்னி: துலாம் ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான பணப் பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். பண வரவு மிகவும் சாதகமாக இருக்கும். எதிர்பாராத வகையில் கிடைத்த பணம் உங்களை ஆச்சரியப்படுத்தும். சந்தைப்படுத்துதல், கற்பித்தல், ஆங்கரிங் செய்தல், அரசியல்  தொடர்பான பணியை உடையவர்கள் பெரும் பயனை பெறுவார்கள். இந்த நேரம் இவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும்.

மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்

தனுசு: சுக்கிரனின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். வருமானத்தில் குறிப்பிடத்தக்க வகையில் உயர்வு ஏற்படலாம். பண ஆதாயங்களால் நிதி நிலை வலுப்பெறும். மீடியா, கவர்ச்சி, பேஷன் டிசைனிங் போன்றவற்றில் தொடர்புடையவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அலுவலக பணியில் உள்ளவர்களும் பெரிய வெற்றியைப் பெறலாம். முதலீடு லாபகரமாக முடியும். இந்த நேரத்தில், அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும் .

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு ராசிக்காரர்களுக்கு சுக்ரனின் பெயர்ச்சி அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும். எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார். அதிர்ஷ்டத்தை அன்னை மகாலட்சுமி அள்ளி வழங்குவாள். புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வீடு வாகனம் வாங்கலாம். முதலீடு செய்ய இது நல்ல நேரம். சொத்து சம்பந்தமாக வேலை செய்பவர்கள் பெரிய பலன்களைப் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News