விபத்தில் பலியான பேரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாட்டி விபத்தில் பலி!

உயிரிழந்த முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது பாட்டி பழனியம்மாள் என்பவர் பேருந்தில் ஊருக்கு வந்திருந்தார்.

Last Updated : Jan 19, 2022, 03:02 PM IST
விபத்தில் பலியான பேரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாட்டி விபத்தில் பலி! title=

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள முடக்குப்பட்டியை சேர்ந்த ஸ்ரீராமன் மகன் முத்து (22). இவர் திருப்பூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த முத்து, திங்கட்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் அய்யலூருக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கடவூர் பிரிவு அருகே போலீசாரின் ரோந்து ஜீப் திடீரென பழுதாகியதால், ஜீப்பை போலீசார் சாலையில் தள்ளி சென்றுள்ளனர்.

அப்போது, முத்து ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஜீப்பின் பின்னால் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு நேற்று உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

ALSO READ | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; காவல்துறை தீவிர விசாரணை!

உடலை சொந்த ஊருக்கு கொண்டுசென்ற உறவினர்கள் அங்கு முத்துவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தங்கமாபட்டியில் உள்ள இடுகாட்டில் உடலை வைத்து விட்டு திண்டுக்கல்- திருச்சி 4 வழிச்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் எஸ்பி வெள்ளைச்சாமி, வேடசந்தூர் டிஎஸ்பி மகேஷ் மற்றும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

அப்போது, முத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கையை வர வழைத்து உறவினர்களிடம் காண்பித்தனர். இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, முத்துவின் உடலை தகனம் செய்தனர்.

இதனிடையே, உயிரிழந்த முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது பாட்டி பழனியம்மாள் என்பவர் பேருந்தில் ஊருக்கு வந்திருந்தார். மயானம் செல்வதற்காக தங்கமாபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வடமதுரை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News