"எங்களை சீண்டினால் வெடிகுண்டு வைப்போம்" -முன்னாள் ராணுவ வீரர் சர்ச்சைப் பேச்சு

Tamil Nadu BJP Hold Hunger Strike: திமுகவிற்கு எதிராக வெடிகுண்டு வைக்க செய்துவிடாதீர்கள்" ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேச்சால் பரபரப்பு

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 21, 2023, 02:46 PM IST
  • குடும்ப பிரச்சினை காரணமாக ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார்.
  • ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் கைது.
  • இனி நடந்தால் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம் -பாண்டியன்.
"எங்களை சீண்டினால் வெடிகுண்டு வைப்போம்" -முன்னாள் ராணுவ வீரர் சர்ச்சைப் பேச்சு title=

சென்னை: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலத் துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன், "எங்களுக்கு குண்டு வைக்கத்தெரியும், எனவே இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்" என ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேசியது:
இக்கூட்டத்தில் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன், "இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பிரபுவை திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் படுகொலை செய்துள்ளார். நான் உன்னை என்ன செய்தாலும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, எனக்கு என்னுடைய திமுக தலைவர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். எனவே நான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று இதை செய்து உள்ளார்.

எங்களுக்கு குண்டு வைக்க தெரியும்:
திமுக கொள்ளை அடிப்பதிலும், கொலை செய்வதிலும் தைரியமானவர்கள். ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள். வெடிகுண்டு வைக்க தெரிந்தவர்கள். இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்" என்று பேசியிருப்பது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

கடும் நடவடிக்கை தேவை:
வெடிகுண்டு வைப்போம் என தமிழ்நாடு அரசை மிரட்டும் தொனியில் முன்னாள் ராணுவ வீரர் பேசியிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க சதி எனவும், அவர் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

உண்ணாவிரத போராட்டம்:
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலையை கண்டித்து பாஜக சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்துக்கொண்டு உள்ளார். 

மேலும் படிக்க: தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

என்ன நடந்தது? 
கிருஷ்ணகிரி அருகே வேலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சினை காரணமாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: வைகோ கடும் கண்டனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News