மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை- அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவர்கள் யாரையும் கட்டாயமாக பள்ளிக்கு வரச் சொல்லி நிர்ப்பந்திக்கவில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2021, 07:08 AM IST
மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை- அன்பில் மகேஷ் பொய்யாமொழி title=

தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படையுள்ளதாக என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. 

இதற்கிடையில் தற்போது நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் கட்டாயம் வகுப்புக்கு வர வேண்டும் என்பதில்லை. தீபாவளிக்கு பிறகு வர விரும்பும் மாணவர்கள் வரலாம் என்று பள்ளி (TN Schools) கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh) தெரிவித்துள்ளார்.

ALSO READ: TN School Reopening: நவம்பர் 1ம் தேதி நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது

இந்நிலையில் நேற்று சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் தீபம் மருத்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவு தனியார் மருந்துவமனையின் துவக்க விழா நடைபெற்றது. ஊரக தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தீவிர சிகிச்சை பிரிவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தீபாவளி பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என்று பல தரப்பினர் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். 

மாணவர்கள் பள்ளிக்குக் கட்டாயமாக வர வேண்டும் என்று அரசு கூறவில்லை. முன்னதாக 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் அரசு இதேதான் கூறியது. ஒழுங்குக்கு மாணவர்கள் பழக வேண்டும் என்பதற்காகவே நவம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள் தீபாவளி பண்டிகைக்குப் பிறகுதான் வர முடியும் என்றால் தாராளமாக வரலாம்.

நீட் தேர்வு எதிர்ப்பு தொடர்பாக, தமிழக முதல்வர், திமுக - எம்.பி.,க்கள் மூலம், 12 மாநில முதல்வர்களை அணுகி உள்ளோம். அவர்களிடம் நீட் தேர்வு ரத்து தொடர்பாக எங்களின் கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டுள்ளன. அதற்கு அவர்களின் கருத்து இனிதான் வரும். நீட் தேர்வு விவகாரத்தில் மாநில முதல்வர்கள் அளிக்கும் பதில், நம் முதல்வரின் குரலுக்கு கண்டிப்பாக வலு சேர்க்கும்

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக, இந்த ஆண்டு 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ALSO READ: TN School Reopening: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய முடிவை எடுத்தது தமிழக அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News