கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் விலக்களித்து பாஸ் என அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் விலக்களிக்க வேண்டும் என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 29, 2020, 02:50 PM IST
கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் விலக்களித்து பாஸ் என அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் title=

சென்னை: கட்டணம் செலுத்தாத மாணவர்களையும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து, அவர்களும் பாஸ் என அறிவித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பேரிடர் நெருக்கடியில் தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை கைகழுவி விட்டது அதிமுக அரசு. இதனால் பல கல்லூரிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என்று திமுக (DMK) தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ALSO READ | BE மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் பாஸ்: அரசு அதிரடி

கடந்த 26 ஆம் தேதி கொரோனா நெருக்கடி காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு மிகப்பெரிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அந்த செய்தி என்னவென்றால், கல்லூரியில் இறுதிப்பருவத்தை (Semester Exam) தவிர மற்ற பருவத்தில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியர்ஸ் மாணவர்கள் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தாலே பாஸ் ஆனதாக தமிழக அரசு (TN Govt) அறிவித்தது. மேலும் தேர்வுக்கான கட்டணம் செலுத்திவிட்டு தேர்வுக்காக காத்திருந்த அனைவரும் தேர்ச்சி. மேலும் இது தொலைதூர கல்வியில் பயின்று வந்த மாணவர்களுக்கும் பொருந்தும் என தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி. அன்பழகன் (K. P. Anbalagan) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Trending News